கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
தென் கொரியாவின் சான்சீயோன் நகரில் கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நடப்பு ஆண்டில் நடக்கும் எட்டாவது பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பு உலக டூர் தொடராகும். மேலும் இந்த போட்டி இன்று தொடங்கி ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுமார் 62 நிமிடங்கள் நடைபெற்ற முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், கொரியாவின் சோய் ஜி ஹூன் மோதினர்.
இந்த ஆட்டத்தில் தொடக்கச் சுற்றில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோய் ஜி ஹூன்னை 14-21 21-16 21-18 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆறாம் நிலை இந்திய வீரர் லக்ஷயா சென், அடுத்ததாக இந்தோனேஷியாவின் ஷேசர் ஹிரன் ருஸ்டாவிடோவை சந்திக்கிறார்.