games

img

கொரிய ஓபன் பேட்மிண்டன்: 2ஆவது சுற்றில் லக்ஷயா சென் தோல்வி    

கொரிய ஓபன் பேட்மிண்டன், ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2ஆவது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் தோல்வியடைந்தார்.    

தென் கொரியாவின் சன்சியான் நகரில் பால்மா ஸ்டேடியத்தில் கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை நடைபெறும்.    

இந்த தென் கொரிய ஓபன் சூப்பர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளான லக்ஷயா சென், எச். எஸ். பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பி.வி. சிந்து உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.          

இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2ஆவது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஷேசர் ஹிரேன் ஆகியோர் எதிர்கொண்டனர்.  

இந்த ஆட்டத்தில் 20-22,9-21 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென், ஷேசர், 24 ஆம் நிலை வீரரான ஹிரேனிடம் தோல்வியடைந்தார்.