games

img

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் – 3வது சுற்றுக்கு முன்னேறிய பி.வி. சிந்து மற்றும் லட்சயா சென்

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் லட்சயா சென் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.  

பாரீஸ் – பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் பாரீஸ் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் டென்மார்க் நாட்டின் ஜூலி ஜேக்கப்சென் ஆகியோர் விளையாடினர்.  35 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21-15, 21.18 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு சிந்து முன்னேறினார்.

அதனை தொடர்ந்து அடுத்த சுற்று போட்டியில் டென்மார்க் நாட்டின் லைன் கிறிஸ்டோபர் சென்னுடன் சிந்து இன்று விளையாடினார். இதில் சிந்து, டேனிஸ் வீராங்கனையை 21-9, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  

மேலும் இதே போன்று ஆடவர் ஒற்றையிரில் இந்திய வீரர் லட்சயா சென், சிங்கப்பூரின் லே கியான் யூ ஆகியோர் விளையாடினர். இந்த போட்டியில் 21-17, 21-13 என்ற செட் கணக்கில் சென் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

;