100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 105 வயது மூதாட்டி ராம்பாய் என்பவர் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 105 வயது மூதாட்டி ராம்பாய் என்பவர் தனி நபராக கலந்துகொண்டு, 45.40 வினாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளார்.
மேலும் 200 மீட்டர் ஓட்டத்தில் 1 நிமிடத்தில் 52.17 வினாடிகளில் இலக்கை கடந்து அசத்திய மூதாட்டி, இனி சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார்.