games

img

டோக்கியோ ஒலிம்பிக்...  போட்டி நடைபெறும் கிராமம் திறப்பு... 

டோக்கியோ
32-வது ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23-ஆம் தேதி தொடங்குகிறது. 16 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுத் திருவிழா ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  

இதற்காக அனைத்து வசதிகள் நிறைந்த அதிக பொருட்செலவுடன் ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் திருவிழா தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், கொரோனா காரணமாக பலத்த பாதுகாப்பு வசதிகளுடன் இன்று (ஜூலை 13) ஒலிம்பிக் கிராமம் இன்று திறக்கப்பட்டது.  இந்த ஒலிம்பிக் கிராமத்தில் குடியிருப்பவர்களில் (போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், போட்டிக்காக வேலை செய்பவர்கள்)  80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வெகுவாக பரவ சாத்தியமில்லை.   

205 நாடுகளைச் சேர்ந்த 11000 -விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்கள் மற்றும் வீரார்களின் குழுவினர் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியே சென்றால் தினமும் பரிசோதனை செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.   

;