19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23 அன்று தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு தில்லியில் கடந்த சனியன்று நடைபெற்றது.
பாஜகவின் கேவலமான சூழ்ச்சி
ஆனால் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி சுற்றுக்கு முன்னரே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் களான பஜ்ரங் பூனியா (65 கிலோ), சாக்சி மாலிக் (64 கிலோ), காமன்வெல்த் சாம்பியன் வினேஷ் போகத் (53 கிலோ) ஆகியோர் நேரடி தேர்வு மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி அனுமதி அளித்தது. மேற்குறிப்பிட்ட மூவரும் பாஜக எம்பியும், மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சிங்கின் பாலியல் வக்கிரங்களுக்கு எதிராக போராடியவர்கள். அதாவது 3 பேர்தான் பிரிஜ் பூஷண் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போராட்ட வழியில் நடவடிக்கை மேற்கொண்டவர்கள். இதன் காரணமாகவே இவர்கள் 3 பேருக்கும் ஒன்றிய பாஜக விளையாட்டுத்துறை அமைச்ச கம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
சாக்சி மாலிக் அசத்தல்
இந்த சிறப்பு அனுமதியின் மூலம் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்சி மாலிக் 3 பேரும் மனமாற்றம் அடைவார்கள், அதன்பிறகு இவர்கள் பாலியல் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் விவகாரத்தை கண்டுகொள்ள மாட்டார்கள், சொந்த கட்சி எம்பியை காப்பாற்றிவிடலாம் என்று கணக்கு போட்டுள்ளது ஆளும் பாஜக அரசு. ஆனால் சுதாரித்துக்கொண்டசாக்சி மாலிக் “மல்யுத்த வீரர் - வீராங்கனைகளின் ஒற்றுமையை உடைக்கவே நேரடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது”எனக் கூறி ஒன்றிய விளை யாட்டுத்துறை அமைச்சகத்தின் தந்திர வாய்ப்பை நிராகரித்தார். ஆனால் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் இது பற்றி எதுவும் கூறாமல் அமைதி காத்தனர். கிட்டத்தட்ட நேரடி தகுதியை ஏற்றுக்கொண்டவர்கள் போல இன்றுவரை அமைதியாக இருக்கின்றனர். பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்திற்கு வழங்கப்பட்ட நேரடி தகுதி யை எதிர்த்து தில்லியில் உள்ள இந்திய மல்யுத்த சம்மேளன அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 20 வயதுக்கு உட்பட்ட உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரரான அஜீத் கல்கால், ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் கைப்பற்றிய வீராங்கனையான அந்திம் பங்ஹால் சார்பில் கூட்டாக தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தகுதிச் சுற்றும் நிறைவு பெற்றது. ஏறக்குறைய ஆசிய விளையாட்டு போட்டி க்கான இந்திய மல்யுத்த அணி அறிவிக்கப்பட்டுவிட்டது.
போராட தெரிந்தவர்களுக்கு விதிகள் பற்றி தெரியாதா?
தற்போதைய இந்திய மல்யுத்த உலகில் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்சி மாலிக் மூவரும் சீனியர். அனைத்து விதிகளும், நுணுக்கங்களும் அவர்களுக்கு தெரியும். வயதுக்கு ஏற்ப பக்குவங்களும் உள்ளது. புரியும்படி சொன்னால் இந்திய மல்யுத்த உலகின் முக்கிய தலைவர்கள் போன்றவர்கள். தலைவர்கள் என்ற பெயருக்கு ஏற்ப பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங்கின் பாலியல் வக்கிரங்களுக்கு எதிராக 2 கட்டங்களாக நடைபெற்ற போராட்டத்தை முன்னிறுத்தி நடத்தியவர்கள். ஆனால் திடீரென என்ன நடந்தது என தெரியவில்லை? பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஒன்றிய பாஜக அரசின் செக்கில் வீழ்ந்துள்ளார்கள். சாக்சி மாலிக் மனசாட்சி யுடன் நேரடி வாய்ப்பை நிராகரித்துள்ளார். எல்லாம் தெரிந்தும் ஏன் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் நேரடி வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்கள் என இதுவரை தெரியவில்லை.
தகுதிச் சுற்றில்
நேரடி வாய்ப்பை ஏற்றுக்கொண்டதை விட இருவரின் அமைதிதான் இந்திய விளையாட்டு உலகில் மோசமான பின்விளைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனை களுக்கு அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு சலுகை வழங்கப்படுகிறது என்றாலும், தகுதி சுற்றுக்கு எவ்வித சலுகை கிடையாது. முறைப்படி விளையாடிய பின்புதான் தொடர்களில் பங்கேற்க முடியும். ஆனால் தகுதி சுற்றில் சலுகை வழங்கியுள்ளது ஆளும் பாஜக. எல்லாம் தெரிந்தும் ஏன் ஏற்றுக்கொண்டார்கள் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்?
பணம் வாரி இறைக்கப்பட்டதா? இல்லை வேறு எதுவும் திட்டமா?
போராட்ட குணம் கொண்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் திடீர் மாற்றம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1. ஆட்சி கவிழ்ப்பு ஸ்டைலில் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகிய இருவருக்கும் பணம் வழங்கப்பட்டதா?
2. அரசு பதவி, சம்மேளன பதவி எதுவும் ஆசை காட்டப்பட்டதா?
3. எம்எல்ஏ, எம்பி, நலவாரிய பதவி வாக்குறுதி எதுவும் கொடுக்கப்பட்டதா?
4. வரவிருக்கும் ஒலிம்பிக் சுற்றுக்கு சிறப்பு அனுமதி வாக்குறுதி ஆசை எதுவும் வழங்கப்பட்டதா? என பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. இந்த நான்கில் ஏதாவது ஒன்று நிகழாமல் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் அமைதியாக இருக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.