‘‘தாய் நாட்டை அடிமைப் படுத்தி ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்களின் தலைநகரில், 30-ஆவது ஒலிம்பிக் தொடரில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று ஜமைக்கா நாட்டின் கொடியேற்றப்பட்டு தேசிய கீதமும் ஒலிக்க செய்து, தன் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின பரிசாக கொடுத்து வர லாற்றை மாற்றி எழுதியவர் உசைன் போல்ட். அதே நாட்டில், அதே ஆண்டில் (1986) நான்கு மாதங்களுக்கு பிறகு பிறந்தவர் ஷெல்லி அன் பிரேசர். இவ ரும் தேர்வு செய்தது தடகளம். அதுவும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமாகும். இரு வருமே உலகின் அதிவேக வீரர்கள். முதலிடத்தை பிடித்தவர்கள். ஒலிம்பிக் போட்டியிலும் உலக தடகளத்திலும் தங்கப் பதக்கங்களை வென்றவர்கள். ஆண்களுக்கான ஓட்டப்பந்த யத்தில் இருந்து உசேன் போல்ட் ஓய்வு பெற்றாலும், தனது 35-ஆவது வயதில் உலக தடகளத்தில் ஐந்தாவது முறை யாக தங்கப் பதக்கத்தை அறுவடை செய்த ஷெல்லி அன் பிரேசர் அவரது சாதனையை அவரே முறியடித் திருக்கிறார்.
வெறும் கால்களுடன்...
ஜமைக்காவின் தலைநகர் கிங்ஸ்டனின் தெருவோர வியாபாரி மாக்சின் சிம்ப்சன்-ஓரேன் ஃப்ரேசன் தம்பதிகளுக்கு இரண்டு மகள், இரண்டு மகன்கள். இவர்களில் மூத்த மகள் ஷெல்லி அன் பிரேசர். அம்மா உள்ளூரில் தடகள வீராங்கனை. இதனால் சிறு வயது முதல் கரடு முரடான பாதைகளில் வெறும் காலு டன் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று உள்ளார். பள்ளிப் படிப்புடன் தடக ளத்தை தொடர்ந்துள்ளார். உள்ளூரில் இளைஞர்களுடன் போட்டியிட்டு வெற்றிகளை குவித்துள்ளார். வேகமாக ஓடும் இவரது திறமையை கண்ட பள்ளியின் ஆசிரியர்களும் விளையாட்டு பயிற்சியாளர்களும் இவருக்கு சிறப்பு பயிற்சிகளை கொடுத்து ஜமைக்காவின் ஜூனியர் அணியில் சேர்த்துள்ளனர். முதல் ஓட்டத்தில் 100 மீட்டரில் வெண்கல பதக்கம் வென்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.
முதல் கரீபியன் பெண்மணி
ழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மேலும் கடுமையான பயிற்சி களை மேற்கொண்டார். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் சீனியர் அணியில் இடம் பிடித்து பெய்ஜிங் ஒலிம்பிக் தொடருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலகின் நட்சத்திர வீராங்கனைகள், அனுபவம் நிறைந்த மூத்த வீராங் கனைகள் பலரும் தங்கப் பதக்கத்திற் கான போட்டியில் வரிசை கட்டி நிற்க, ஷெல்லி அன் பிரேசரை களம் இறக்கி யது ஜமைக்கா. அதுதான் அவரது முதல் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டி. இளம் கன்று பயம் அறியாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்து அதிவேக வீராங்கனை பட்டத்துடன் தங்கப் பதக்கத்தையும் வென்றார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் கரீபியன் பெண்மணியான இவரது அசுர ஓட்டத்தை பார்த்த விளையாட்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. இதன் தொடர்ச்சியாக 2012 லண்டன், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட 8 பதக்கங்களை வென்றது மட்டுமல்லாமல், ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து நான்கு முறை பதக்கம் வென்ற உல கின் ஒரே வீராங்கனையும் ஆனார்.
‘புயல் வேக’ வீராங்கனை
உலகின் அதிவேக வீராங்கனை யார்? என்பதை நிர்ணயிக்கும் பெண் களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்த யத்தில் 2009-ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தனி நபராக ஐந்து முறை தங்க பதக்கம் வென்று ‘புயல் வேக’ வீராங்கனை என்ற வரலாற்று சாதனைக்கும் இவர் சொந்தக்கார ரானார்.
‘‘பாக்கெட் ராக்கெட்’’
20 ஆண்டுகால தடகள வாழ்க்கை யில் சர்வதேச அளவில் 20 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை குவித்திருக்கும் ஷெல்லி அன் பிரேசர், பல பின்னடைவுகளை சந்தித்து இருக்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் அதிலிருந்து மீண்டு வந்து, அவருக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். குறிப்பாக 35 வயதிலும் குழந்தை பெற்ற பிறகும் தங்கம் வென்று சாதித் திருப்பது மற்ற வீராங்கனைகளுக்கு பெரும் உந்து சக்தியாக உள்ளது. மற்றொரு ஓட்டப்பந்தய வீராங் கனையான அளிசன் பெலிக்ஸ்ம் தாய்மை அடைந்த பின் உலக தட களத்தில் தங்கம் வென்று சாதித்து இருக்கிறார், ஆனாலும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ராக்கெட் வேகத்தில் பாய்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இலக்கை எட்டும் இவரை ‘‘பாக்கெட் ராக்கெட்’’ என்றே ரசி கர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.
- ஸ்ரீராமுலு