games

img

‘தேசிய இனத்தையே’ மாற்றிக் கொண்ட நடேலா

உக்ரைன் நாட்டின் மீதான தாக்கு தலால் ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர் - வீராங்க னைகள் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  தடைக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு கள் எழுந்தாலும், விம்பிள்டன் டென்னிஸ் நிர்வாகம் அதனை கண்டு கொள்ளவில்லை. முக்கியமாக தனது தடை உத்தரவில் திடமாக உள்ள நிலை யில், ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ்  வீராங்கனையான நடேலா டிசலமிட்ஸே (29) தனது ஒரே ஒரு செயலால் டென்னிஸ் உலகை திரும்பி பார்க்க வைத்துள் ளார். அது யாதெனில் விம்பிள்டன் தொடரில் விளையாடுவதற்காக தனது “தேசிய இனத்தையே மாற்றிக் கொண்டுள்ளார்.அதாவது ‘ரஷ்யர்’ என்று இருந்தால் தானே தடை விதிப்பீர்கள், நான் “ஜார்ஜியர்”என்று எனது தேசிய இனத்தையே மாற்றிக் கொண்டு ரஷ்யா வுக்காக விளையாடுகிறேன் என்று அறி வித்துள்ளார். நடேலாவின் அதிரடி முடிவாக இருந்தாலும் விம்பிள்டன் நிர்வாகம் இதுபற்றி கருத்து மற்றும் அறிவிப்பாணை எதையும் வெளியிட வில்லை. எனினும் விம்பிள்டன் டென்னிஸ்  நிர்வாகம் இந்த விவகாரத்தை எப்படி  சமாளிப்பது என்று விழித்து வருகிறது. நடேலாவுக்கு தடை விதித்தால் ஜார்ஜி யாவிற்கு தனியாக பதில் அளிக்க வேண்டும். களமிறங்க அனுமதி வழங்கி னால் விம்பிள்டன் நிர்வாகத்தில் இருக்கும் ரஷ்ய எதிர்ப்புத் தரப்பின ருக்கு தனியாக விளக்கம் அளிக்க வேண்டும். சிக்கலை அவிழ்க்க விம்பிள்டன் டென்னிஸ் நிர்வாகம் என்ன செய்யப் போகிறதோ?