கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் டென்னிஸ் உலகின் நம்பர் 1 வீரரும், செர்பிய நட்சத்திரமு மான ஜோகோவிச்சை ஆஸ்திரேலியா தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தது. உலக சாம்பியன் அந்தஸ்து, சட்டம், நாடுகளுக்கு இடையேயான உறவு என அனைத்து வகைகளிலும் ஜோகோவிச் போராடி னார். ஆனால் ஆஸ்திரேலிய நாட்டின் கொரோனா பாதுகாப்பு விதிமுறையில் அவரால் விலக்கு பெற முடியவில்லை. இதனால் ஆஸ்தி ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கா மல் செர்பியாவிற்கு பறந்தார். ஜோகோவிச் விசா பிரச்சனை நடந்து கொண்டிருந்த வேளையில் ஸ்பெயின் வீரரும், சமீபத்தில் நிறைவு பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவருமான நடால்,”ஜோகோவிச் விளையாடாமல் இருந்தாலும் ஆஸ்திரேலிய ஓபன் சுவாரஸ்யமாக தான் நடைபெறும்” என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நடாலின் இந்த பேச்சை ஜோகோவிச் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இரு வீரர் களின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் லேசாக மோதினர். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடங்கியதும் இந்த விவகாரம் அப்படியே ஆப் ஆனது. இந்நிலையில் நடால், ரஷ்ய வீரர் மெத்வதேவ்வை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை கைப்பற்றினார்.
மேலும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் அதிக முறை பட்டம் வென்றவர்கள் (21) பட்டியலில் நடால் முதலிடம் பிடித்தார். நடாலுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், ஜோகோவிச்சும் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். ஆனால் பொதுவாக தான் தெரிவித்தார். அதா வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்ற நபர் என்ற பெயரிலும், 21 முறை பட்டம் வென்ற சாதனை என்ற பெயரிலும் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு அடுத்த டுவிட்டில் 2-ஆம் இடம் பிடித்த ரஷ்ய வீரர் மெத்வதேவிற்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்து,“உங்கள் போராட்டத்திற்கு எதிர் காலத்தில் நிறைய கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளை பெறுவீர்கள்” என டுவிட் செய்தார். ஜோகோவிச்சின் இந்த தனிப்பட்ட டுவிட் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் விளையாட்டு உலகம் எதுவும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் நடாலுக்கும், ஜோகோவிச்சிற்கும் தனிப்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மோதல் அடுத்து வரும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் களங்களில் போட்டி யின் மூலமோ, போட்டியின் போது நேரடியாக வாக்குவாதத்தின் மூலமோ நடைபெறலாம். ஏனென்றால் நடாலை விட ஜோகோவிச் சற்று கட்டுப்பாட்டை இழந்து நடக்கக்கூடியவர். அதிகமாக கோபப்படுபவர். அடுத்து வரும் மே மாதம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இரு வீரர்களும் எந்த விதத்தில் விளை யாடுகிறார்கள் அல்லது நேருக்கு நேர் மோது கிறார்கள் என்பது பொருத்திருந்து பார்க்கலாம்.