games

img

விளையாட்டு செய்திகள்

கலிபோர்னியா
இந்தியன் வேல்ஸ் டென்னிஸ்
முன்னணி வீராங்கனைகள் அடுத்தடுத்து தோல்வி

சர்வதேச டென்னிஸ் தொடர்களில் முக்கிய தொடராக இருப்பது இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் ஆகும். அமெரிக்காவின் கலி போர்னியா நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் வழக்கம் போல இளம் வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி மிரட்டி வரு கின்றனர். இந்திய நேரப்படி திங்க ளன்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்று ஆட்டத்தில் உலகத் தர வரிசையில் 12-ஆவது இடத்தில் உள்ள பிரேசிலின் ஹதாத் மாயா 6-2, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தர வரிசையில் இல்லாத ரஷ்யாவின் அனஸ்டாசியாவிடம் வீழ்ந்தார். இதேபோல உலகத் தரவரிசையில் 18-ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கீஸ் 4-6, 1-6 என்ற செட் கணக் கில் கஜகஸ்தானின் யூலாவிடம் வீழ்ந்து வெளியேறினார். முன் னணி அதிரடி வீராங்கனையான கலின்ஸ்கியா, இத்தாலியின் இளம் வீராங்கனையான பவோலி னியிடம் 6-3, 3-6, 6-4 என்ற செட்  கணக்கில் வீழ்ந்தார். சீனியர் வீராங்கனைகளான கரோலின் வொஸ்னியாக்கி (எதிர் - கேட்டி, அமெரிக்கா), ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் (எதிர் - வெரோனிக்கா, ரஷ்யா) ஆகியோ ரும் தற்போதைய காலத்தில் முன் னணி வீராங்கனைகளை வீழ்த்தி  4-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆடவர் ஒற்றையர் 
மகளிர் பிரிவை போன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிர்ச்சி தோல்விகள் எதுவும்  அரங்கேறவில்லை என்ற நிலை யில், திங்களன்று நடைபெற்ற  3-ஆவது சுற்று ஆட்டத்தில் அமெரி க்காவின் செல்டன் (தரவரிசை- 16),  அர்ஜெண்டினாவின் பிரான் சிஸ்கோவை (தரவரிசை-22) 7-6  (7-5), 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.இதே போல உலகத் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் உள்ள ஜெர் மனியின் ஜுவரேவ் 7-6 (9-7),  6-3 என்ற செட் கணக்கில் நெதர்லா ந்து நாட்டின் டல்லூனை (தரவரிசை-27) வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

எந்த விதிமுறையும் இல்லாதது

கலப்பு தற்காப்புக் கலை

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத விளையாட்டு

கலப்பு தற்காப்புக்கலை (Mixed martial  arts) சண்டை என்பது மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டு பிரிவு களின் உருமாற்ற பிரிவாகும். மல்யுத்தம், குத்துச்சண்டை பிரிவில் போதுமான விதிமுறை கள் உள்ளன. ஆனால் கலப்பு தற்காப்புக்கலை சண்டை பிரிவில் எந்த விதிமுறைகளும் கிடையாது. குத்து விடுவது, காலால் உதைப்பது, மயங்கும் வரை கழுத்தை நெறிப்பது, தாவி உதைத்து எலும்புகளை உடைப்பது என பல்வேறு வகையில் தாக்குதல் நடத்த லாம் என்பதால், உலகின் அதிபயங்கர விளையாட்டாக உள்ளது கலப்பு தற்காப்புக்கலை. கலப்பு தற்காப்புக்கலை பிரிவு 1978இல் உருவானதாக கூறப்பட்டாலும், 1990களில் தான் இந்த சண்டை உலகில் ஓரளவுக்கு பிரபலமடைந்தது. அதுவும் டபிள்யு டபிள்யு மல்யுத்த சண்டை சினிமா  போன்று போலி சண்டை என வெளியுலகிற்கு தெரிய வந்த பின்னரே, கலப்பு தற்காப்புக்கலை பிரிவு 2010க்கு மேல் உலகின் மிகவும் பிரபல மான தொடராக மாறியுள்ளது. போட்டியில் வீரர்களை வீழ்த்த விதிகள் எதுவும் இல்லை என்பதால், கலப்பு தற்காப்புக்கலை பிரிவில் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. போட்டியிலும் சரி, போட்டிக்கு பின் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சை ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் ஏராளம் என்பதால் விளையாட்டு உலகில் அதிபயங்கரமான போட்டியாக உள்ள இந்த கலப்பு தற்காப்புக்கலையில் கிழக்கு ஆசியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்கள் நாடுகளைச் சேர்ந்த  பிரிவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.