டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (35) டென்னிஸ் துறை யில் பல்வேறு சாதனைகள்புரிந்தாலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத தால் பல்வேறுசிக்கலை எதிர்கொண்டு விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லாததால் ஆஸ்திரேலிய அரசு விசா மறுத்தது. இதனால் ஆஸ்திரேலியா ஓபனில் (2022) இருந்து விலகினார். 2023-இல் ஆஸ்திரேலிய அரசு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டுப்பாடுகளை நீங்கியதால் நடப்பாண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்றார். ஆஸ்திரேலியா போன்று பெரும்பாலான நாடுகள் கொரோனா சான்றிதழ் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிலையில், அமெரிக்கா வரும் மே மாதம் முதல் சான்றிதழ் கட்டுப்பாடு களை நீக்குவதாக அறிவித்துள்ளது. எனி னும் இன்னும் 2 மாத காலத்திற்கு கொரோனா சான்றிதழ் கட்டுப்பாடு நிலுவையில் இருப்பதால் மார்ச் 19-ஆம் தேதி இந்தியன் வெல்ஸ் கார்டனில் நடைபெறும் பிஎன்பி பரிபாஸ் ஓபனில் பங்கேற்க நோவக் ஜோகோவிச்சிற்கு அமெரிக்கா விசா மறுத்துள்ளது.
அமெரிக்கா - விசா - கொரோனா சான்றிதழ்
அமெரிக்க அரசு கொரோனா தடுப்பூசி சான்றிதழை விசாவிற்கு சமமான ஆவணமாக கருதி கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வெளிநாட்டு விமானப் பயணிகள் தடுப்பூசி இல்லாமல் அமெரிக்காவில் காலடி வைக்க முடியாது. முக்கியமாக மற்ற நாடுகளை போல் விஐபி-களுக்கு சிறப்பு நுழைவு இருப்பது போல அமெரிக்காவில் யாருக்கும் சிறப்பு நுழைவு கிடையாது. இதனால்தான் ஜோகோவிச்சிற்கு விசா மறுக்கப்பட்டுள் ளது.
ஜோகோவிச் போராட்டம்
கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் போராடியது போல அமெரிக்காவில் தடுப்பூசி சான்றிதழ் இல்லா விசாவிற்கு விண்ணப்பித்தார். ஆனால் இந்த விவகாரத்தை கண்காணிக்கும் ஹோம் லேண்ட் செக்யூரிட்டி ஜோகோவிச்சின் தடுப்பூசி தள்ளுபடி கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
கடைசி டெஸ்டிலும் கம்மின்ஸ் விலகல் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியா
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது பார்டர் - கவாஸ்கர் என்ற பெயரிலான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 3 ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி 2 ஆட்டங்களிலும், ஆஸ்திரேலியா ஒரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் வியாழனன்று தொடங்குகிறது. அகமதாபாத் டெஸ்ட் போட்டியிலும் விலகுவதாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். தாயாருக்கு உடல்நிலைக் குறைவு காரணமாக கம்மின்ஸ் இந்தூரில் நடைபெற்ற 3-வெகு டெஸ்ட் போட்டியில் விலக, ஸ்மித் தற்காலிக கேப்டன் பொறுப்பை ஏற்று ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி அணிக்கு வெற்றியையும் தேடித்தந்தார். இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டிக்கு ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.