செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சேர்ந்த ஆறு.பிரக்ஞானந்தா பங்கேற்றார். நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை 1.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
மேலும் புதன்கிழமை 11 ஆம் வகுப்புத் தேர்வை முடித்துக்கொண்டு இரவில் இறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தா கலந்துகொண்டார். இறுதிச்சுற்றில் சீனாவைச் சேர்ந்த உலகின் நெ.2 வீரர் டியோ லிரினுடன் பிரக்ஞானந்தா மோதினார். இறுதிச்சுற்றின் முதல் நாளில் 2.51.5 என சீன வீரர் வென்று சீன வீரர் முன்னிலை வகித்தார்.
29 வயது டியோ லிரின் முதல் ஆட்டத்தில் வென்றார். 2ஆவது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வென்று அதனை சமன் செய்தார். ஆனால் 3ஆவது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்று 2-1 என முன்னிலை வகித்தார் டியோ லிரின். பிரக்ஞானந்தாவின் கடைசி ஆட்டம் டிரா ஆனது. இதனால் முதல் நாளில் நடைபெற்ற போட்டியில் டியோ லிரின் வெற்றி பெற்றார்.
இதையடுத்து 2ஆம் நாள் ஆட்டமான மை பிரேக்கர் சுற்று நேற்றிரவு நடைபெற்றது. இதில் வெற்றி வாய்ப்பு இருந்தும் ஒரு தவறான நகர்த்தலால் சீன செஸ் வீரர் டியோ லிரனிடம் தோல்வியை சந்தித்தார். ஆனால் உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2 ஆவது இடம் பிடித்து பெரும் சாதனையை படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.
இந்நிலையில் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 16 வயதாகும் பிரக்ஞானந்தா 18 வயதை எட்டியதும் முறைப்படி வேலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
10 வயதிலேயே சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்ற இவர் இளவயது சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.