games

img

பாராசின் ஓபன் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன்!  

பாராசின் ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் வென்றார்.  

பாராசின் ஓபன் செஸ் தொடர் செர்பியாவில் நடைபெற்றது. இதில் சக இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்ரி, லாசெசர் யோர்டானோவ் (பல்கேரியா), காசிபெக் நோகர்பெக் (கஜகஸ்தான்), சகநாட்டவரான கவுஸ்டாவ் சாட்டர்ஜி, அரிஸ்டன்பெக் உராசயேவ் (கஜகஸ்தான்) ஆகியோரை இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வென்றார்.  

இதையடுத்து, மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 7 வெற்றி, 2 ‘டிரா’ உட்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். ரஷியாவின் அலெக்சாண்டர் பிரெட்கே, 7.5 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தார். கஜகஸ்தானின் அலிஷர் சுலேமெனோவ், இந்தியாவின் முத்தையா தலா 7 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டனர். பின்னர், டை பிரேக்கர் ஸ்கோர் அடிப்படையில் கஜகஸ்தான் வீரர் 3வது இடத்தை வென்றார். முத்தையாவுக்கு 4வது இடம் கிடைத்தது.    

இதைத்தொடர்ந்து, சென்னையில் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா 'பி' அணியில் பிரக்ஞானந்தா இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;