games

img

சாதனை சிறுவனுக்கு கிராண்ட் மாஸ்டர் சான்றிதழ்...

திருநெல்வேலி:
நெல்லையை சேர்ந்த சிறுவன் அனிருத்குமர பெருமாளுக்கு கிராண்ட்மாஸ்டர் சான்றிதழ் ஆசியா இந்தியா புக் ஆப்ரெக்கார்ட்ஸ் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.பாளையங்கோட்டை மகாராஜா நகர் தென்றல் நகர் தாமஸ் ரோட்டை சேர்ந்தவர் குமாரப்பெருமாள். இவர் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் வசிக்கிறார். அங்கு ஐடி துறையில் பணியாற்றுகிறார். அவரது மனைவி அமுதா. இவர்களுக்கு விஜய் சீனிவாஸ், அனிருத் குமர பெருமாள் ஆகிய மகன்கள் உள்ளனர்.

அனிருத் குமர பெருமாள் முதலாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் 1 முதல் 50 எண்களை 58 வினாடிகள் 46 மில்லி வினாடிகளில் கூட்டி சாதனை செய்துள்ளான். 105 டைனோசர்களின் படங்களை ஒரு நிமிடம் 33 விநாடிகளில் அடையாளம் கண்டு கூறியுள்ளான். சிறுவன் அனிருத் குமரபெருமாளின் இரு  சாதனைகளையும்  பாராட்டி ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழும் கிராண்ட்மாஸ்டர் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. அனிருத் குமர பெருமாளுக்கு  பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரி
வித்து வருகின்றனர்.சாதனை படைத்துள்ள சிறுவன் அனிருத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் நல்லசிவனின் கொள்ளு பேரன் ஆவார்.

;