games

img

செஸ் ஒலிம்பியாட் 2022-- நான்காவது நாள்

மதியம் 3 மணிக்கு மேல் 2வது சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.

தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

செஸ் ஒலிம்பியாட் நடை பெறும் சென்னை - மாமல்லபுரம் இடையே அடையாறு பகுதியில் இருந்து இலவச பேருந்து கள் மற்றும் மாமல்லபுரம் முதல் போட்டி நடக்கும் இடமான பூந்தேரி  கிராமம் வரை “நட்பு வாகனங்கள்” (ஆட்டோ, இதர வாகனங்கள்) என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் இயக்கப் படும் பேருந்துகள் முற்றிலும் இலவசம் ஆகும். ஆனால் நட்பு வாகனங் களுக்கு (குறிப்பிட்ட வாகனங்களில் மட்டும் இலவச சேவை உள்ளது) கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது.  இந்நிலையில் சென்னை - செஸ் ஒலிம்பியாட் மார்க்க (மாமல்லபுரம்) வாகனங்கள் (தமிழ்நாடு அரசு ஏற்பாடு  செய்த வாகனங்கள் மற்றும் அனைத்து  வாகனங்களுக்கும் பொருந்தும்) அதிக கட்டணம் வசூலித்தாலோ, விதி மீறி செயல்பட்டாலோ கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

என்ன காரணம்?

44-வது செஸ் ஒலிம்பி யாட் தொடரின் ஜோதி காஷ்மீர் பகுதிக்கு (ஆக்கிரமிப்பு காஷ்மீர் என வெளிப்படையாக எந்த காஷ்மீர் பகுதி என்று  குறிப்பிடவில்லை) கொண்டு  செல்லப்பட்டதால் தான் இந்தியாவில் நடைபெறும் தொடரில் பங்கேற்கமாட் டோம் என சர்வதேச ஊடகங் களில் செய்தி வெளியாகி யது. ஆனால் பாகிஸ்தான் நாடு இதுதான் காரணம் என வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு வலுக்கும் கண்டனம்

விளையாட்டுடன் அரசியலை கலக்கும் இந்திய அரசின் முயற்சியை பாகிஸ்தான் கண்டிக்கிறது என விளக்கம் இல்லா அறிக்கையுடன் செஸ்  ஒலிம்பியாட் தொடரில் இருந்து விலகு வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல்பாட்டிற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உலக நாடுகளின் செஸ் துறை சார்ந்த முன்னாள் வீரர்கள், வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

அறிவிப்பில் கூட சொதப்பல்

பாகிஸ்தான் செஸ் நட்சத்தி ரங்கள் கடந்த 27-ஆம் தேதி  இந்தியாவிற்கு வந்துவிட்டனர். ஆனால்  பாகிஸ்தான் அரசு செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கக்கூடாது என முன்கூட்டியே அறி விக்காமல் ஆசை, ஆசையாக பங்கேற்க வந்தவர்களை விளையாட விடாமல் அர சியல் காரணத்தை விளையாட்டில் பதித்து செஸ் நட்சத்திரங்களை ஏமாற்றியுள்ளது. தடை விதிப்பதற்கான அறிவிப்பில் கூட அசமந்தமாக செயல்பட்டதால் தான் கண்டன குரல்கள் மிக வேகமாக, அதிக மாக எழுந்து வருகிறது.