மகிழ்ச்சி இல்லாமல் மாய்த்துப் போகும் உலகக்கோப்பை கால்பந்து கொண்டாட்டங்கள்
அடுத்தடுத்து இரட்டை சம்பவங்கள்
கால்பந்து உலகில் மிக முக்கிய தொடர்களில் ஒன்றானது உலகக்கோப்பை கால்பந்து தொடர். அதிக பரிசுத்தொகை, உலகப்போர் யுத்தம் போன்று நாடுகளுக்கு இடையே மோதல், ஒவ்வொரு வீரர் - வீராங்கனைகளின் ஆக்ரோஷமான ஆட்டம், உலகம் முழுவதும் ரசிகர்களின் ஆரவாரம் என உலகக்கோப்பை கால்பந்து தொடர்களுக்கு பிரம்மாண்ட சிறப்பு உள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது போல கால்பந்து விளையாடும் நாடுகள் ஒருமுறையாவது உல கக்கோப்பை வென்றே ஆக வேண்டும் என வெறியோடு ஒவ்வொரு 4 ஆண்டுகாலம் தீவிர கனவு, பயிற்சியுடன் களமிறங்கு கிறது. ஆனால் உலகக்கோப்பையை கைப்பற்றியபின் வீரர் - வீராங்கனைகளின் உற்சாகம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். உலகக்கோப்பை வென்ற நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை கொண்டாட்டம் இருக்கும். ஆனால் சமீபத்தில் நிறைவு பெற்ற ஆடவர், மகளிர் உலகக்கோப்பை தொடர் முன்னெப்போதும் இல்லாத வகையில், பரபரப்பாகவும், மிக சுவாரஸ்ய மாகவும் நிறைவு பெற்ற நிலையில், வெற்றி கொண்டாட்டம்தான் சர்ச்சையோடு நிறைவு பெற்று அவப்பெயரை பெற்றது. அதுவும் தனிநபரால் ஒருநாட்டின் உற்சாக கொண்டாட்டம் அடியோடு காணாமல் போனது. அந்த 2 சம்பவங்களை பார்க்கலாம் :
2022 உலகக்கோப்பை அர்ஜெண்டினா சாம்பியன்
கால்பந்து உலகின் தலைசிறந்த அணி யான அர்ஜெண்டினா, கத்தார் நாட்டில் நடைபெற்ற 22-வது உலகக்கோப்பை சீசனில் பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பி யன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை அர்ஜெண்டினா நாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமே கொண்டாடியது. காரணம் அர்ஜெண்டினா அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் கொண்டாட்டம் தூள் பறந்தது. ஆனால் ஒரே ஒரு சம்பவத்தால் கொண்டாட்டத்தில் சுவாரஸ்யமின்மை தொற்றிக்கொண்டது. அர்ஜெண்டினா அணியின் கோல் கீப்பர் எமிலியனோ மார்டினேஸ் தான் வென்ற “கோல்டன் கையுறையை” வாங்கும் பொழுது அரு வருக்கத்தக்க ஆபாச சைகையை உலகக்கோப்பை வழங்கும் விழா மேடையிலேயே செய்ய, ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் முகம் சுளித்தது. மார்டினேஸுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இறுதிப் போட்டி நிறைவுபெற்ற 2 நாட்களுக்கு பின்னர் சர்வதேச கால்பந்து சம்மேளனம் விசாரணைக்கு உத்தரவிட்டது. எச்சரிக்கை புள்ளிகள் பெற்று தண்டனையில் இருந்து தப்பினர் எமிலியனோ மார்டினேஸ். 44 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணிக்கு மார்டினேஸின் தனிநபர் செயலால் சங்கடம் ஏற்பட்டது.
2023 உலகக்கோப்பை ஸ்பெயின் சாம்பியன்
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 9-வது சீசன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் கூட்டாக நடைபெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி முதல் முறையாக கால்பந்து உலகக்கோப்பையை கைப்பற்றியது. ஸ்பெயின் வீராங்கனைகள் அனைத்தையும் மறந்து உற்சாக கொண்டாட்டத்தில் கலக்கி கொண்டிருந்தனர். இந்த கொண்டாட்டத்திற்கு ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலை வர் லூயிஸ் ரூபியாலெஸ் கொள்ளி வைத்தார். கோப்பை வழங்கும் மேடையிலேயே லூயிஸ், ஸ்பெயின் அணியின் மூத்த வீராங்கனைக்கு முத்தம் கொடுத்தார். இந்த விதிமீறிய செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோப்பை பெற்றப்பின் வீராங்கனைகள் கொண்டாட்டத்தில் உற்சாகத்தை குறைத்துக்கொண்டனர். விளையாட்டு உலகம் இன்றி அனைத்து தரப்பினரும் ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தன. அதிரடி நடவடிக்கையில் களமிறங்கிய ஸ்பெயின் அரசு, லூயிஸ் ரூபியாலெஸை மன்னிப்பு கோரவும், பதவியை ராஜினாமா செய்யவும் உத்தரவிட்டது. ஸ்பெயின் மகளிர் அணி முதன்முத லாக கால்பந்து உலகக்கோப்பையை முத்தமிட்ட செய்தியை விட, லூயிஸ் ரூபியாலெஸின் சர்ச்சை முத்தம் விளையாட்டு உலகின் முக்கிய தலைப்பு செய்தியாக மாறியது மட்டுமல்லாமல் ஸ்பெயின் நாட்டினர் உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தை 2 நாட்களில் மறந்துவிட்டனர்.