மகளிர் டி-20 உலகக்கோப்பை நியூஸிலாந்து சாம்பியன்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த 9 ஆவது சீசன் மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி முதன்முறையாக மகளிர் டி-20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. கடந்த 8ஆவது சீசனில் ஆஸ்திரேலியா விடம் உலகக்கோப்பையை பறி கொடுத்தது போல தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் வெறுங்கையோடு நாடு திரும்பியுள்ளது.
ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 2 உலகக்கோப்பையை பறிகொடுத்த தென் ஆப்பிரிக்கா
சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினாலும் கடைசி நேர சொதப்பல்களால் தென் ஆப்பிரிக்கா ஆடவர் அணி இதுவரை உல கக்கோப்பையை கையில் ஏந்தாமல் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 9ஆவது சீசன் ஆடவர் டி-20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் நூலிழையில் தோல்வி கண்டு கோப்பையை நழுவ விட்டது தென் ஆப்பிரிக்கா அணி. ஆடவர் அணியைப் போல மகளிர் கிரிக்கெட் அணியும் உலகக்கோப்பை யை வெல்ல முடியாமல் திணறி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 9ஆவது சீசன் உல கக்கோப்பை டி-20 தொடரில் தொடக்கம் முதலே மிக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா மக ளிர் அணி இறுதிக்கு முன்னேறியது. ஆனால் மோசமான பேட்டிங்கால் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்துள்ளது. குறிப்பாக 3 மாத இடைவெளியில் தென் ஆப்பிரிக்கா ஆடவர் மற்றும் மக ளிர் அணிகள் அடுத்தடுத்து உல கக்கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களி டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.