தென் ஆப்பிரிக்காவின் அதிரடியை தாக்குப்பிடிக்குமா பாகிஸ்தான்?
இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உலகக்கோப்பை நடுக்கட்டத்தைத் தாண்டியுள்ள நிலையில், வெள்ளியன்று நடைபெறும் 26-ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. தனது 3-ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவிய காலத்தில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா தனது 4-ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியையும், 5-ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தையும் பிரம்மாண்ட வெற்றியுடன் புரட்டியெடுத்து புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் அணி சிறிய அணியான ஆப்கானிஸ்தான் அணியுடன் தோல்விகண்டு ஹாட்ரிக் தோல்வியுடன் பார்ம் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறது. தொடர் தோல்வியில் இருந்து மீளும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் தென் ஆப்பிரிக்கா முரட்டுத்தனமாக விளையாடி வருவதால் பார்ம் பிரச்சனையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அந்த அணியை சமாளிப்பது மிகவும் சிரமமான காரியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இடம் : என்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, தமிழ்நாடு
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஒடிடி - ஹாட்ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும். ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)
புதிய சாதனை படைத்த இந்தியா
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி சீனா - 2023
ஒரே நாளில் 3 தங்கம் வில்வித்தை : கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வின் ராகேஷ் குமார் - ஷீட்டல் தேவி தங்கப்பதக்கம் வென்றனர். துப்பாக்கிச்சுடுதல் : ஆடவர் ஒற்றையர் 50 மீ மிக்ஸ் பிரிவில் (6) இந்திய வீரர் சித்தார்த்தா பாபு (எஸ்ஹெஜ்-1) 247.7.புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். குண்டு எறிதல் : ஆடவர் குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீரர் 16.03 மீ தூரம் ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரரான ரோஹித் குமார் (14.56.மீ) வெண்கலப்பதக்கம் வென்றார். மகளிர் பிரிவில் (எப் - 34) இந்திய வீராங்கனை பாக்யஸ்ரீ 7.54 மீ தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். தடகளம் : ஆடவர் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் (டி-37) இந்திய வீரர் ஷெராயன்ஸ் திரிவேதி வெண்கலப்பதக்கம் வென்றார். ஆடவர் 100 மீ டி-35 பிரிவில் நாராயண் தாகூர் வெண்கலப்பதக்கம் வென்றார். இருவருக்கும் இது இரண்டாவது பதக்கம் ஆகும். வில்வித்தை : ஆடவர் இரட்டையர் பிரிவில் (ஓபன் - எப்1) பிரிவில் இந்திய வீரர்கள் அடில் முகமது - நவீன் டாடல் இணை வெண்கலப்பதக்கம் வென்றது. பேட்மிண்டனில் 5 பதக்கம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுகந்த் கதம் (எஸ்எல்4) வெண்கலப்பதக்கம் வென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் (எஸ்ஹெஜ்-6) இந்தியாவின் சிவ ராஜன் - கிருஷ்ணா இணை வெண்கலப்பதக்கம் வென்றது. மகளிர் ஒற்றையர் பிரிவில் (எஸ்ஹெஜ்-6) இந்திய வீராங்க னை நித்ய ஸ்ரீ வெண்கலப்பதக்கம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் (எஸ்எல்-3, எஸ்யு-5) இந்தியாவின் மனிஷா ராமதாஸ் - மந்தீப் கவுர் ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது. மகளிர் ஒற்றையர் (எஸ்யு-5) பிரிவிலும் மனிஷா ராமதாஸ் வெண்கலப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி தொடரின் 4-ஆவது சீசன் கடந்த அக்., 22 அன்று சீனாவின் ஹாங்சோ நகரில் தொடங்கியது. அக்., 28 வரை நடைபெறும் இந்த தொடரின் 4-ஆவது நாளான வியாழனன்று இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவில் 78 பதக்கங்களை குவித்து தனக்குள் புதிய வரலாறு படைத் துள்ளது இந்தியா. கடந்த 2018இல் இந்தோனேசியாவில் நடைபெற்ற 3-ஆவது சீசனில் இந்தியா 72 பதக்கங் களை வென்றதே இந்தியாவின் அதிகப்பட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.