தோல்வியை ருசிக்காமல் அரையிறுதியில் காலடி வைக்குமா இந்தியா?
நெதர்லாந்து உடன் இன்று மோதல்
இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உலகக்கோப்பை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தீபாவளி நாளான ஞாயிறன்று நடைபெறும் 45-ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் எவ்வித பலனும் அளிக்கப்போவதில்லை. காரணம் போட்டியை நடத்தும் இந்திய அணி ஏற்கெனவே அரை யிறுதிக்கு முன்னேறிவிட்டது. நெதர்லாந்து அணி தொடரை விட்டு வெளியேறிவிட்டது. இத னால் இந்த ஆட்டம் வெaறும் சம்பிர தாயம்தான். இருந்தாலும் தோல்வி யை சந்திக்காமல் வெற்றி நடை யோடு அரையிறுதியில் காலடி வைக் கும் முனைப்பில் இந்திய அணி யும், ஆறுதல் வெற்றியோடு தாய் நாடு திரும்பும் முனைப்பில் நெதர் லாந்து அணியும் என இரு அணிக ளும் வெற்றியின் மீது குறியாக கள மிறங்குவதால் இந்த ஆட்டம் பர பரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்தியா - நெதர்லாந்து
இடம் : சின்னசாமி மைதானம், பெங்களூரு, கர்நாடகா
நேரம் : மதியம் 2:00 மணி
இன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு
நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டம் அக்., 05 அன்று தொடங்கிய நிலையில், இந்தியா - நெதர்லாந்து ஆட்டத்துடன் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு நவ., 15 அன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது.
இந்திய அணி செல்லும் பாதை ஆபத்தானது
“காயம்பட்ட சிங்கத்தின் மூச்சு காற்று கூட அதோட கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும்” என்ற பழமொழி கிரிக்கெட் உலகில் மிக மிக முக்கியமானது ஆகும். அதாவது வெற்றிநடையில் செல்லும் அணியை விட தோல்வி பாதையில் சென்று வெற்றி பாதைக்கு திரும்பும் அணியின் ஆட்டத்திறன் மிக அதிரடியாகவும் இருக்கும். நடப்பு சீசன் உலகக்கோப்பையில் இந்த பழமொழிக்கு ஏற்ப ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் தோல்வி பாதையில் பயணித்து சூப்பர் பார்மில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் போட்டியை நடத்தும் இந்திய அணி தோல்வியை எதிர்கொள்ளாமல் வெற்றி நடையோடு அனைத்து ஆட்டங்களிலும் (தனது 8-ஆவது லீக் வரை) வெற்றியை ருசித்துள்ளது. அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இந்திய அணியின் செயல்பாடு பாராட்டத்தக்கது என்றாலும், அரையிறுதியில் அந்த அணிக்கு மோசமான சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இந்திய அணி தொடர் வெற்றி காரணமாக மிகவும் அசால்ட்டாக, சந்தோசமாக, ஆட்டம் பாட்டம் போல கொண்டாடி விளையாடினர். முக்கியமாக “நாங்கள் வீழ்த்த முடியாத அணி” என்ற செருக்கான மனநிலையுடன் இந்திய வீரர்கள் உள்ளனர். இது மிகவும் ஆபத்தானது ஆகும். அரையிறுதியில் இந்திய அணியோடு தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் அணியாகும். நியூஸிலாந்து அணி கணிக்க முடியாத அணி. ஆனால் இந்திய அணி ஒரே ஆட்டத்திறனை கொண்டது. இதனால் இந்திய அணி அரையிறுதியில் கவனமாக விளையாடினால் மட்டுமே இறுதிக்கு முன்னேற முடியும். இல்லையென்றால் மோசமான பின்விளைவை சந்திக்க நேரிடும்.