games

img

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி : இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி 

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 

19 வயதுக்குப்பட்டோருக்கான ஆசியக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் வியாழனன்று இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவிச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஷைக் ரஷீத் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து, 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி  38.2 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அரிஃபுல் இஸ்லம் எடுத்த 42 ரன்கள் தான் வங்கதேசத்தின் அதிகப்பட்சமாக ஸ்கோர். இதன்மூலம் 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.  

 

;