games

img

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - முதல் வெற்றியை பதிவு செய்யுமா சிஎஸ்கே? 

15 ஆவது சீசன் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் புனேவில் கடந்த 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் 17-வது ஆட்டத்தில், சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஐடேஜா தலைமையிலான சென்னை அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது.

இரண்டு அணிகளுமே இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில், முதல் வெற்றியை பதிவுசெய்யும் நோக்கில் இரண்டு அணிகளும் களமிறங்குகின்றன.

;