games

img

விளையாட்டு - பாரீஸ் ஒலிம்பிக்

நாங்க இப்படி தான் வருவோம் பாரம்பரிய உடையில் களமிறங்கும் மங்கோலியா.

தற்போதைய நவீன விளையாட்டு உலகில் பல்வேறு பிரம்மாண்டங்க ளுடன் ஜெர்சி (உடைகள்) தயாரிக்கப்பட்டு வருகிறது. எளிதில் தண்ணீர் மற்றும் வியர்வையில் நனையாத உடைகள், உடலுக்கு போதுமான அளவில் காற் றோட்டம் கிடைக்கும் நவீன ஆக்சிஜன் உடைகள் கூட வந்துவிட்டன.  இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்காக கிழக்கு ஆசிய நாடான மங்கோலியா வித்தியாசமான ஜெர்சியை வெளியிட்டுள்ளது. அதாவது அந்நாட்டு பாரம்பரிய குளிர்கால உடையான “டீல்” உடையை ஒலிம்பிக் தொடருக்கான உடையாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த உடையை வைத்து அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது என்பதால் மங்கோலியா நாட்டின் அறிவிப்பு சுவாரஸ்யமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனவெறி பாடல் விவகாரம் பிரான்ஸ் அரசிடம் மன்னிப்புக் கோரினார் அர்ஜெண்டினா துணை ஜனாதிபதி

அமெரிக்காவில் நடை பெற்று வந்த 48ஆவது சீசன் கோபா அமெரிக்கா தொ டரில் அர்ஜெண்டினா அணி கொலம்பியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற கொண்டாட்டத்தில் அர்ஜெண் டினாவின் முன்கள வீரர் என்ஸோ பெர்னாண்டஸ், பிரான்ஸ் நாட்டு வீரர்களை கேலி செய்யும் வகையில் இனவெறியுடன் வார்த்தை கள் அடங்கிய பாடல் ஒன்றை பாடினார். என்ஸோ பெர்னாண் டஸுடன் அர்ஜெண்டினா வீரர்கள் சிலரும் அந்த இன வெறி பாடல்களை பாடினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அர்ஜெண்டினா வீரர்களுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்தன. தொடர்ந்து அர்ஜெ ண்டினா வீரர்களுக்கு ஆதர வாக அந்நாட்டு துணை ஜனா திபதி விக்டோரியா வில்லார் ரூயல்,”பிரான்ஸ் நாட்டவர்கள் “காலனித்துவவாதிகள்”, அந்நாட்டு மக்கள் “நயவஞ்ச கர்கள்” என்பதால் அர்ஜெண் டினா வீரர்கள் பிரான்ஸ் நாட்டு க்கு எதிராக அந்த பாடலை பாடினர்” எனக் கூறினார். அர் ஜெண்டினா துணை ஜனாதிப தியும் பிரான்ஸ் நாட்டிற்கு எதி ராக பேசியதால் பிரச்சனை  பெரிதாக முளைத்தது. பிரான்ஸ் நாடும் ராஜ்யரீதியிலான பிரச்ச னையாக விவாதிக்கத் தொடங்கியது. இந்நிலையில், அர்ஜெண் டினா ஜனாதிபதி ஜேவியர் மிலேயி இனவெறி பாடலை பாடிய வீரர்கள், துணை ஜனா திபதி விக்டோரியா வில்லார் ரூயலின் செயல்பாட்டை கண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து துணை ஜனாதிபதி விக்டோரியா வில்லார்ரூயல் பிரான்ஸ் அரசிடம் மன்னி ப்புக் கோரினார்.

சென்னை அணியில் ரிசப் பண்ட்?

இந்திய கிரிக்கெட் அணி யின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்டருமான ரிஷப் பண்ட் 2024 ஐபிஎல் சீசனில் தில்லி அணிக்காக விளையாடி னார். ரிஷப் பண்ட் தற்போது தில்லி கேப்டனாக உள்ள நிலையில், தொடர்ந்து 2025 சீசனில் அதே அணியில் விளையாடுவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் 2025 ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் தில்லி அணியை விட்டு வெளியேற உள்ளதாகவும், மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் டை தக்க வைக்க தில்லி அணி நிர்வாகம் விரும்பவில்லை என டைனிக் ஜாக்ரன் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஒருவேளை ரிஷப் பண்ட்டை தில்லி அணி நிர்வா கம் விடுவித்தால், அவரை மெகா ஏலத்தில் எடுக்க சென்னை அணி நிர்வாகம் ஆர்வமாக உள்ளதாக மேலும் ஒரு தகவல் வெளியாகியுள் ளது. காரணம் சென்னை அணியின் முன்னாள் கேப்ட னும், மூத்த வீரருமான தோனி ஓய்வு பெறும் எண்ணத்தில் இருப்பதால், விக்கெட் கீப்பர் பிரிவுக்காக ரிசப் பண்ட்டை தங்கள் பக்கம் இழுக்க சென்னை அணி நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளதா கவும் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகி யுள்ளன.