கார் விபத்தில் படுகாயம் அடைந்த இந் திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீர ரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் எய்ம்ஸ் (ரிஷிகேஷ்) விளையாட்டு காயங்கள் பிரிவை கவ னித்து வரும் டாக்டர் கமர் ஆசம் ரிஷப் பண்ட் காயங்கள் குறித்து கருத்து தெரி வித்துள்ளார். அக்கருத்தில்,”பண்ட் தசை நார் காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங் கள் ஆகும். ஆனால் தசைநார் கிழிவு மிக கடுமையானதாக இருக்குமானால் கூடு தல் காலம் கூட ஆகலாம்” என கூறி யுள்ளார். ரிஷப் பண்ட்டின் முழுமை யான காய மதிப்பீடு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக் கது.