games

img

கற்பனைக் கதிர் - கணேஷ்

“விடுதலை வாங்கித் தந்ததே மோடிதான்”

நட்டா பேச்சால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு

இந்தியாவுக்கு ஆங்கிலேயர் களிடமிருந்து விடுதலை வாங்கித் தந்ததே நரேந்திர மோடி தான் என்று பாஜக தலைவர் நட்டா  கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் ஆகியவற்றை உருவாக்கியது பாஜகதான்” என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு பெரும் வரவேற்பு கிடைத்த தால், ஒருபடி மேலே போகும் நட்டா வின் ஆசையில் உருவானதுதான் இந்தக் கருத்தாகும். பாஜக ஆதர வாளர்கள் இதற்குப் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.  சமூக வலைத்தளங்களிலும் போட்டிபோட்டுக் கொண்டு பதி விடுகிறார்கள். “சிறு வயதிலேயே முத லையைத் தோளில் போட்டு, வீட்டிற்குக் கொண்டு வந்து வளர்த்த வராயிற்றே” என்ற பதிவு, லட்சத்து க்கும் மேற்பட்ட “லைக்”குகளை அள்ளியது. அதற்குக் கீழே ஒருவர், “இதென்ன பிரமாதம். உத்தரகண்ட் நிலநடுக்கத்துல ஒரே ஒரு கார்ல போய் 15 ஆயிரம் பேரக் கூட்டிட்டு குஜராத்துக்கு திரும்புனவர்” என்று போட்டவுடன், ஆதரவாளர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். “மேக மூட்டமா இருக்குறப்ப ரேடார்ல சிக்க மாட்டோம்னு உலக விமானப்படைகளுக்கே பாடம் எடுத்தவர் நம்ம ஜி”னு வீரப் பிரதாபப் பட்டியலில் மேலும் ஒன்றை  சேர்த்தார் ஒருவர். “பழைய கதையெல்லாம் எதுக்கு... சந்திரயான்-2 தோல்வி என்ற வுடன், இஸ்ரோவைப் பூட்டிவிட்டு விஞ்ஞானிகள் எல்லாம் கிளம்பி விட்டார்கள். மோடிதான் இன்னொரு முறை முயற்சி பண்ணினா போயி றலாம்னு சொன்னார்..” இதை நம்ப மாட்டார்களோ என்று நினைத்த பதிவர், “இத நான் சொல்லல... தேசிய கல்வி மற்றும் பயிற்சி ஆய்வுக் கவுன்சில் சொல்லிருக்கு” என்று ஒரு வர் ஆதாரத்தையும் இணைத்தார்.  நட்டாவின் கருத்து சமூக வலைத்தளங்களில் வந்தவுடன் முதல் “லைக்” மோடிதான் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுச் செய்திகள்

கூட்டமில்லாததால், டிக்கெட் இல்லாதவர்களையும் அன்று அனுமதித்துவிட்டார்கள். நெதர்லாந்து சுழற்பந்து வீச்சாளர் பந்து போட வந்ததிலிருந்தே “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்தை சிலர் தொடங்கினர்.  பந்து வீச்சாளரிடம் எந்தவொரு தாக்கமும் இல்லாததால், பக்கத்தில் இருந்தவரி டம் “இவர் பெயர் என்ன” என்றார்கள். “ஆர்யன் தத்” என்றவுடன், “தாடியப் பாத்து ஏமாந்துட்டோமோ... இங்க நமக்கு வேலையில்ல” என்று நகர்ந்தனர். 

குடும்ப அரசியல் ஒழிப்புக்குழு

குடும்ப அரசியலுக்கு எதிராக ஒன்றிய அரசே அதிரடியாக ஒரு குழு ஒன்றை அமைத்திருக் கிறது. அதில்  பியூஷ் கோயல் தலை மையில் அனுராக் தாகூர், அஜித் பவார், ஜோதிராதித்ய சிந்தியா, எச்.டி.குமாரசாமி மற்றும் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் சாரா வல்லுநர் என்ற அடிப்படையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவும் இதில் இடம் பெற்றிருக்கிறார். இந்தக்குழு பற்றி, “ஒழிப்புக்குழுவில் அரசியல் வாரிசுகளாக இடம் பெற்றிருக்கிறார்களே” என்று ஊடகவியலாளர் சந்திப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் கேட்டபோது, “அவர்களுக்குதானே குடும்ப அரசியல் பற்றித் தெரியும்” என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே அருகில் இருந்த உ.பி. பாஜக  தலைவரும். எம்.எல்ஏ.வும்,  ராஜ்நாத்சிங்கின் மகனுமான பங்கஜ்  சிங், “சந்திப்பு முடிந்தது. கிளம்புங்கள்” என்றார். 

அண்ணாமலை அதிரடி

வாகன யாத்திரையில் இருக்கும் அண்ணாமலையிடம் மைக்கை நீட்டினார்கள் ஊடகவியலாளர்கள். “விடுதலையை வாங்கித் தந்ததே மோடிதான்னு நட்டா சொல்லியிருக்காரே...” “உண்மையச் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்களே... சமுத்திர குப்தர் தென்னி ந்தியா பக்கம் 1957ல சுதந்திரமா வர முடி ஞ்சதே, விடுதலை கிடைச்சதுனால தான..” தெறித்தனர் ஊடகவியலாளர்கள்.