தொடக்க வீரர்கள் எனும் அதிசயம்...
விளையாட்டு உலகில் ஒவ்வொன் றுக்கும் ஒரு சிறப்பு உள்ளது. கால்பந் தில் கீப்பருக்கு என்ன தகுதிவாய்ந்த சிறப்பு உள்ளதோ, அதே மாதிரி கிரிக்கெட் உலகில் பேட்டர் பிரிவில் தொடக்க வீரர்களாக கள மிறங்கும் நபர்களுக்கு என்று தனிச்சிறப்பு உள்ளது. காரணம் ஒரு கிரிக்கெட் அணியின், ஒரு ஆட்டத்தின் பேட்டிங் வளர்ச்சி செயல் பாடுக்கு தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தால் மட்டுமே மற்ற மிடில் ஆர்டர் வீரர்கள், பின்வரிசை வீரர்கள் ஓர ளவுக்கு ரன் குவிப்பார்கள். அதனாலேயே கிரிக் கெட்டில் தொடக்க வீரர்களுக்கு தனி மவுசு உள்ளது. சிறப்பு உள்ள தொடக்க வீரர்களின் நிலைகளை பற்றி விரிவாக காணலாம்:
சிறப்பு
தொடக்க வீரர்களை தேர்வு செய்வது அவ்வ ளவு சாதாரண விஷயமல்ல, மிகப் பெரிய சிக்கலான விஷயம் ஆகும். வீரர்களின் குணம், கீப்பிங் திறன், பீல்டிங் திறன், ஆல்ரவுண்டர் திறன் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே தொடக்க வீரர் தேர்வு செய்யப்படும்.
தகுதிகள்
தொடக்க வீரர்களுக்கு முதலில் அதிரடி மனநிலை வேண்டும். அதாவது போர்க்களமே சென்றாலும் போர் வீரர்களை போன்று உறுதி யான, அதிரடியான, ஆக்ரோஷமான மன நிலை இருந்தால் மட்டுமே கிரிக்கெட் உலகில் தொடக்க வீரர்களாக ஜொலிக்க முடியும். மிக வும் முக்கியமான விசயம் என்னவென்றால் நெருக்கடியான எத்தகைய பந்துவீச்சு நிலை யை தாங்கும் உறுதியான அதிரடி நிலைப்பாடு வேண்டும். எவ்வளவு வேகத்தில் பந்துவீசினா லும் குறைந்த பந்துகளில் அதிரடியாக ரன் குவிக்கும் திறன் வேண்டும். சிக்ஸர், பவுண்டரி மீது மட்டுமே குறிக்கோள் இருக்க வேண்டும். சிங்கிள்ஸ் ரன்களுக்கு அனுமதி கிடையாது.
பயம் இருக்கக் கூடாது
பொதுவாக தொடக்க வீரர்களுக்கு பயம் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. எப்படி பந்து வீசினாலும் பவர் பிளேயில் கட்டாயம் ஓரளவு நன்றாக ரன் குவிக்க வேண்டும் என்பதால் பயம் கொள்ளாமல் அனைத்து பந்துகளையும் பதம் பார்க்கும் தைரியம் வேண்டும் என்பதால் கிரிக்கெட் உலகில் தொடக்க வீரர்கள் என்பது சற்று சிக்கலான, அதிசயமான இடமாக உள்ளது.
2000க்கு மேல் அதிரடி
பொதுவாக கிரிக்கெட் உலகில் 2000ஆம் ஆண்டிற்கு பிறகுதான் அதிரடி மனப்பாண்மை உருவாகியது. அதற்கு முன் லேசான அளவி லேயே தொடக்க வீரர்கள் அதிரடியாக விளை யாடினர். முக்கியமாக காட்டுத்தனமான அதிரடி யில் விளையாடும் தொடக்க வீரர்கள் என்றால் இந்தியாவின் சேவாக், தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட், இலங்கையின் ஜெயசூர்யா ஆகியோர் பிரபல மானவர்கள். இதில் இந்தியாவின் சேவாக் பயம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல் மிரட்டலாக விளையாடக் கூடியவர் என்பது குறிப் பிடத்தக்கது.
உலகின் தலைசிறந்த தொடக்க வீரர்கள் (அதிரடி வீரர்கள் மட்டும்)
* கங்குலி (இந்தியா)
* சேவாக் (இந்தியா)
* ரோஹித் சர்மா (இந்தியா)
* சயீத் அன்வர் (பாகிஸ்தான்)
* அமர் சோஹைல் (பாகிஸ்தான்)
* கிறிஸ்டன் (தென் ஆபிரிக்கா)
* கிப்ஸ் (தென் ஆப்பிரிக்கா)
* ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா)
* ஜெயசூர்யா (இலங்கை)
* தில்சன் (இலங்கை)
* ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா)
* ஹேடன் (ஆஸ்திரேலியா)
* கிறிஸ் கெயில் (மேற்கு இந்திய தீவுகள்)
* ஸ்மித் (மேற்கு இந்திய தீவுகள்)
* மெக்கல்லம் (நியூஸிலாந்து)
* ஸ்டிபன் பிளம்பிங் (நியூஸிலாந்து)
* மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து)
* டிரஸ்கொதிக் (இங்கிலாந்து)
* ஸ்டராஸ் (இங்கிலாந்து)
* தமிம் இக்பால் (வங்கதேசம்)
* வார்னர் (ஆஸ்திரேலியா)
* ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)
* அம்லா (தென் ஆப்பிரிக்கா)