games

img

ஐபிஎல் நிர்வாகத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது

ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களில் 70% வீரர்கள் மிகவும்  இளம் வீரர்கள் தான். இதனால் அவர்களை  தனியாக கவனித்து வருகிறது ஐபிஎல் நிர்வாகம். அதாவது சுதந்திரமாக விட்டுவிடு கிறது. அவர்கள் என்ன செய்தாலும் கண்டு கொள்வதில்லை. ஐசிசி விதிகள் மீறுதலில் செயல்பட்டால் மட்டுமே தண்டனை. மற்ற விவ காரங்களை ஐபிஎல் நிர்வாகம் கண்டு கொள்ளாதது போல அடுத்த போட்டியை  பற்றிய வேலைகளில் சுழல ஆரம்பித்து விடும். ஐபிஎல் அணிகளில் பெரும்பாலான இளம் வீரர்கள் மைதானங்களில் கண்டதை செய்து துறுதுறுவென இருந்தாலும், சேட்டை கள் செய்வதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த  ரியான் தான் இதில் நம்பர் ஒன். சேட்டை, சண்டை, பதிலடி, வீண் வம்பு என அனைத்திலும் ரியான் தான் சூப்பர் ஸ்டார்.  இதில் பெரிய விசயம் என்னவென்றால் ராஜஸ் தான் அணி நிர்வாகம் இவரது சேட்டை களை சிரிப்பாக எடுத்துக்கொண்டு கூடுதல் பயிற்சியுடன்

இந்திய அணியில் இடம் பிடிக்கும் நோக்கத்துடன் மேல்நோக்கி நகர்த்தி வருவது தான். ஐபிஎல் தொடரின் கடைசி கட்டத்தில் கேட்ச் செய்யும் விஷயத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், லக்னோ அணியின் ஆலோசகருமான கம்பீரை கடுமையான அளவிற்கு கிண்டல் செய்தார். லக்னோ அணி கொதித்து துள்ளிய நிலையில், ஐபிஎல் நிர்வா கம், ராஜஸ்தான் அணி கண்டுகொள்ள வில்லை. ராஜஸ்தான் அணி நிர்வாகம் சிரித்து மகிழ்ந்து நிகழ்வை வரவேற்றது போல கொண்டாடினர். ஐபிஎல் நிர்வாகத்தின் ஒரே  எண்ணம் என்னவென்றால் ஹர்ஷல் படே லின் 31 வயதிற்கு ஏற்ப இருக்கக்கூடிய பக்கு வம் 20 வயது உடைய ரியானிடம் இருக்குமா?  என்பது தான். ஒழுங்கு நடவடிக்கையில் இளம் வீரர்களுக்கு தனி விலக்கு கொடுத் துள்ள ஐபிஎல் நிர்வாகத்தின் எண்ணம் உண்மையில் பாராட்டுக்குரியது தான்.