அகமதாபாத்தை மையமாக கொண்ட அணிக்கு “குஜராத் டைட்டன்ஸ்” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அடுத்த மார்ச் மாதம் இறுதியில் ஐபிஎல் தொடரின் 15வது சீசன் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரில் ஏற்கனவே 8 அணிகள் விளையாடிவரும் நிலையில் இந்தாண்டு லக்னோ, அகமதாபாத் ஆகிய நகரங்களை மையமாக கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன.
முன்னதாக லக்னோவை மையமாக கொண்ட அணியின் பெயர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், அகமதாபாத்தை மையமாகக் கொண்ட அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க பிரான்சைஸ் லீக் தொடரில் ஒரு அணியின் பெயர் டைட்டன்ஸ் என்று இருக்கும் வேளையில் தற்போது அகமதாபாத் அளிக்கும் டைட்டன்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கே.எல்.ராகுல். மார்கஸ் ஸ்டோனிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோரையும் குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷித் கான், சுப்மன் கில் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்துள்ளது.
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். மெகா ஏலம் வரும் 12,13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.