games

img

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் - ஓடிடி-யில் எகிறும் மகளிர் கிரிக்கெட்டின் மவுசு

தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடை பெற்று வரும் 8-வது சீசன் மகளிர் உல கக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் நடுகட்டத்தை தாண்டியுள்ள நிலையில், ஆடவர் பிரிவினைப் போலவே மகளிர் கிரிக்கெட்டிற்கும் பாகுபாடு இல்லாத அள வில் ஆதரவு பெருகி வருகிறது. பொது வாக மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்கள் இல்லாமல் மைதா னம் 80% காலியாகவே இருக்கும். ஆனால் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது சீசன் மகளிர் உலகக் கோப்பை தொடரின் அனைத்து ஆட் டங்களிலும் ரசிகர்கள் கூட்டம் போதுமான அளவில் அலைமோதுகிறது.  இதற்கு காரணம் ஐபிஎல் தொடரி னைப் போன்று இங்கிலாந்து, ஆஸ்திரே லிய நாடுகளில் சூப்பர் டி-20 லீக் நடத்து வதுதான். தற்போது இந்தியாவிலும் நடப்பாண்டு முதல் மகளிருக்கான ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில், ஓடிடி பிரிவிலும் மகளிர் கிரிக்கெட்டின் மவுசு எகிறி வருகிறது.