games

img

சுநீல் நரைன் அணியில் இல்லாதது பெரும் இழப்பே - கேப்டன் பொல்லார்ட்

உலகம் முழுக்க விளையாடி வரும் நரைன் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெறாதது பெரிய இழப்பு என கேப்டன் பொல்லார்ட் கூறியுள்ளார். 

டி20 உலகக் கோப்பை அணியில் சுநீல் நரைன் இல்லாதது பற்றி கேப்டன்பொல்லார்ட் கூறியதாவது:  மேற்கிந்தியத் தீவிகளைச் சேர்ந்த சுநீல் நரைன் உலகம் முழுக்க விளையாடி வருகிறார். அவர் அணியில் இல்லாதது இழப்புதான். ஐபிஎல், சிபில் என டி20 கிரிக்கெட் போட்டிகளில் அவருடைய பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். எனவே அவர் அணியில் இல்லாதது பெரிய இழப்பு என ஒப்புக்கொள்கிறோம். அவர் அணியிலிருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். இருப்பினும் அவர் இல்லாத குறையை ஏற்றுக்கொண்டு அடுத்தக்கட்டத்துக்கு நகரவேண்டும். அணியில் உள்ள 15 வீரர்களைக் கொண்டு திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.

சுநீல் ஐபிஎல் 2021 போட்டியில் 14 ஆட்டங்களில் 62 ரன்களும், பந்துவீச்சில் 16 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐபிஎல், சிபிஎல் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தாலும் 2019லிருந்து சர்வதேச டி20 ஆட்டங்களில் சுநீல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

;