games

உலகக்கோப்பை கிரிக்கெட் 2023

13-வது சீசன் உலகக்கோப்பை இந்தியாவில் வியாழனன்று தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் நவம்பர் 19 வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது.

இன்றைய ஆட்டம்

இடம் : ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
நேரம் : மதியம் 2:00 மணி

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓடிடி : ஹாட்ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும், ஸ்மார்ட டிவிக்களில் சந்தா இருந்தால் மட்டுமே காண முடியும்)

தொடக்க ஆட்டத்தை இழிவுபடுத்திய பிசிசிஐ மற்றும் குஜராத் ரசிகர்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் துவக்க ஆட்டம் வியாழனன்று குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூஸிலாந்து நாடுகள் மோதின. இந்தியாவில் 85 சதவீதத்திற்கும் (இளைஞர்கள், பெரியோர்கள்) மேற்பட்டோருக்கு கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்பான ஆர்வம் உள்ளது. முக்கியமாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கிரிக்கெட் என்பது பிரதான ஆர்வ முள்ள  விளையா ட்டாகவும் உள்ள நிலையில், குஜ ராத்தில் நடை பெற்ற இங்கி லாந்து - நியூஸி லாந்து நாடுகள் மோதிய தொடக்க ஆட்டத்தை காண வெறும் 10 சதவீத ரசிகர்களே மைதானத்திற்கு வந்துள்ளனர். இது மிகவும் மோசமான சம்பவம் ஆகும். காரணம் விளையாட்டு உலகில் கிரிக்கெட் உலகக்கோப்பை மிக முக்கியமானது. உலகக்கோப்பையின் எந்த போட்டிகளாக இருந்தாலும் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் ஆர்வமுடன் ரசிப்பார்கள். இதுதான் வரலாறு. ஆனால் 10 சதவீத ரசிகர்களுடன் பிரசித்திபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் விளையாட்டின் தொடக்க ஆட்டம் நடந்து இருப்பது மிகவும் மோசமான சம்பவம் ஆகும். கிட்டத்தட்ட தொடக்க ஆட்டத்தை பிசிசிஐ மற்றும் குஜராத் ரசிகர்கள் இழிவுப்படுத்தியுள்ளனர்.

இதிலும் பொய் பாஜக அறிவித்த 40 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் எங்கே?

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பிரச்சாரமாக எடுத்துக்கொள்ளும் என தகவல் வெளியாகியது.  தகவலுக்கு ஆதார மாக, இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதிய தொடக்க ஆட்டத்தில் 40,000 பெண் களுக்கு இலவச டிக்கெட், உணவு என வழங்கப் படும் என குஜராத் பாஜக அறிவித்தது.  பாஜக அறிவித்தது போல குஜராத் பெண்கள் மைதானத்திற்கு வந்து இருந்தால் 35ரூ இருக்கை நிரம்பி இருக்கும். ஆனால் குஜராத் பெண்கள் யாரும் மைதானத்திற்கு வர வில்லை. இருக்கைகள் காலியிடமாக தான்  இருந்தது. பாஜக தலைமையிலான மோடி ஆட்சி யில் நிகழ்ந்த பல்வேறு போலி சம்பவங்களின் பட்டியலில், உலகக்கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் 40 ஆயிரம் பெண் களுக்கு இலவச டிக்கெட் என்ற புதிய போலி சம்பவமும் அரங்கேறியுள்ளது. 

ஹைதராபாத் ரசிகர்கள் கலக்கல்

உலகக்கோப்பை தொடரின் 2-வது லீக் ஆட்டம் தெலுங்கானா  மாநிலம் ஹைதராபாத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. பாகிஸ்தான் - நெதர்லாந்து நாடுகள் மோதிய இந்த ஆட்டத்தில்  மைதானம் 50ரூ நிரம்பி வழிந்தது. அதாவது இந்திய அணி பங்கேற்றது போல ரசிகர்கள் ஓரளவு மைதானத்தில் குவிந்து இருநாட்டு வீர்ரர்களுக்கும் ஆதரவு அளித்தனர். போட்டி முடியும் வரை மைதானத்தில் இருந்தார்கள். இதனால் பாகிஸ்தான் - நெதர்லாந்து வீரர்கள் கொண்டாட்டத்துடன் விளையாடி னார்கள்.