games

img

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளை யாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி தில்லியில் வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வெறும் 3 நாட்களில் பல மான ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் வெற்றியுடன் வீழ்த்தியது. இந்த படு தோல்வியை மறைக்க ஆஸ்திரேலிய அணி நிர்வாகம், அந்நாட்டு ஊட கங்கள், “இந்திய வீரர்களுக்கு  சாத கமாக மைதானம் உருவாக்கப்பட்ட தாகவும், இதனால்தான் ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் அணி படுதோல்வி யை எதிர்கொண்டதாகவும்” மை தானத்தை குறை கூறி தப்பித்துள்ளது. மைதானத்தின் நிலைமையை கூற லாமே தவிர, குறை கூறமுடி யாது என்பதை உணராத ஆஸ்திரேலியா வீணாக கருத்து கூறி கடும் எதிர்ப்பை  சந்தித்துள்ளது.

இந்திய மைதானங்கள்

இந்தியா வெப்ப மண்டல பகுதியாக இருப்பதால் காலநிலைக்கு ஏற்ப பிட்ச் பகுதியில் குறைந்த அளவு புற்களே இருக்கும். இதனால் இந்திய  ஆடுகளங்கள் குறைந்த உயிரோட்டத்துடனே காணப்படும். பந்துகள் அவ்வளவாக எகிறாது. மிதமான வேகப்பந்துவீச்சும், சுழற்பந்துவீச்சும் மிக நன்றாக செயல்படும். மைதானத்தை கணித்து ஆடி னால் பேட்டர்கள் மிக அருமையாக ரன் குவிக்கலாம். குளிர் பகுதியான தில்லி, தர்மசாலா, மொஹாலி போன்ற மைதானங்கள் சற்று உயிரோட்டத்துடன் காணப்படும். இதுதான் இந்திய ஆடுகளங்களின் பொதுவான தன்மை. தற்பொழுது மட்டுமல்ல காலங்கா லமாக இதே தன்மையில்தான் ஆடுகளங்கள் உள்ளன. பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு அமீ ரகம், வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் இந்தியாவைப் போன்றே மிதமான ஆடுகளங்கள் உள்ளன.

ஆஸ்திரேலியாவிற்கு என்ன பிரச்சனை?

ஆஸ்திரேலியா சற்று குளிர் பிராந்திய பகுதி என்பதால் புற்கள் வளர்ச்சி ஜெட் வேகத்தில் இருக்கும்.  பிட்ச் பகுதி களிலும் புற்கள் அதிகமாக இருக்கும். இதனால் வேகப்பந்துகள் தாறுமாறாக எகிறும். புரியும்படி சொன்னால் ஆஸ்திரேலியாவில் வேகப்பந்துவீச்சு நன்றாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் ஆடுகளங்கள் ஒரே தன்மையில் இருப்பதால்  ஆஸ்திரேலிய  வீரர்கள் வேகப்பந்துவீச்சு, பவுன்சர், சுழற்பந்து வீச்சை நன்றாக கணித்து பேட்டிங் செய்யக்கூடியவர்கள். நியூசிலாந்து, இங்கி லாந்து, அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் மைதானங்கள் 70% ஒரே மாதிரியாக உயிரோட்டமாக இருப்ப தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்குறிப்பிட்ட நாடுகளிலும்  மிக அருமையாக விளையாடும். ஆனால் இந்திய துணைக் கண்டம், மேற்கு இந்தியத் தீவுகள் மைதானத்தில் ஆஸ்திரேலியா  சற்று சொதப்பும். இதனால்தான் இந்தியாவில் தோல்வி கண்டால் ஒரே போடாக மைதானத்தை காரணமாக கதை எழுதிவிடுகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகம்.

இந்தியாவிற்காக ஆடுகளத்தை ஆஸ்திரேலியா மாற்றுமா?

இந்திய வீரர்கள் மிதமான வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சில் அருமையாக விளையாடுவார்கள். காரணம் இந்திய ஆடுகளங்களின் தன்மைகளில் அவர்கள் நன்கு பழக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் சற்று மாறுபட்டது. இந்தியா ஆஸ்திரேலியாவின் ஆடுகளங்களில் திணறும். அதற்காக ஆடுகளத்தை இந்திய ஆடுகளங்களை போன்று ஆஸ்திரேலியா அமைக்குமா? என்ற கேள்வி வலுத்து வருகிறது. உலகில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை, மண்ணின் தன்மை, புற்கள் வளர்ச்சி விகிதம் கிடையாது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வேறுபாடு உள்ளது. அதனை சரியாக எதிர்கொண்டு விளையாடாமல் சொதப்பி தோல்வியை தழுவி பிறகு சாக்குப்போக்கு சொல்லுவது சரியானது அல்ல.


கேப்டவுன் மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்  2-வது வெற்றியை ருசிக்குமா இந்தியா?

8-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்நிலையில் புதனன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் (9-வது லீக்) இந்திய அணி - மேற்கு இந்தியத் தீவுகளை எதிர்கொள்கிறது.

இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : மாலை 6:30 மணி 
பாகிஸ்தான் - அயர்லாந்து 
நேரம் : இரவு 10:30 மணி
இரண்டு ஆட்டங்களும் : நியூலாண்ட்ஸ் மைதானம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஹாட் ஸ்டார்