வியூகம் என்றால் இப்படி இருக்க வேண்டும் கெர்ஜிசிகோவாவிற்கு குவியும் பாராட்டு
பாரம்பரியமிக்க கிர ண்ட்ஸ்லாம் டென் னிஸ் தொடரான விம்பிள் டன் டென்னிஸ் தொடரின் 147 ஆவது சீசன் கடந்த வாரம் நிறைவு பெற்றது. இந்த தொடரின் மகளிர் ஒற்றை யர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் கெர்ஜிசிகோவாவும், இத்தாலியின் பவோலினியும் மோதினர். இந்த ஆட்டத்தில் 6-2, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றினார் கெர்ஜி சிகோவா. கெர்ஜிசிகோவா முதன்முறை யாக சாம்பியன் பட்டம் வென்றதை விட பவோலினிக்கு எதிராக அவர் வகுத்த வியூகம் பாராட்டத்தக்கது ஆகும். பொதுவாக டென்னிஸ் விளை யாட்டில் பந்தை திருப்புவதில் மற்றும் அதிரடி ஆட்டம் மூலம் வியூகம் வகுப்பார்கள். ஆனால் கெர்ஜிசிகோவா பவோலினியை உயரத்தை கணக்கிட்டு கிரிக்கெட் விளையாட் டைப் போல பவுன்சர் வகை ஷாட் மூலம் வெற்றியை ருசித்துள் ளார். பவோலினியை விட (1.68 செ.மீ. உய ரம்) கெர்ஜிசிகோவா (1.78 செ.மீ. உயரம்) உயரமானவர். இதனை சாதகமாக எடுத்துக்கொண்ட கெர்ஜிசிகோவா பவுன்சர் ஷாட் மூலம் பவோலினியை திணறடித்தார். பெரும்பாலான பந்துகள் தனது உயரத்திற்கு மேல் எகிறியதால் ரிட்டர்ன் ஷாட் செய்ய முடி யாமல் பவோலினி திணறினார். ஆட்டத் தின் 60% பந்துகள் பவுன்சராக எகிறியதே பவோலினியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. கெர்ஜிசிகோவாவின் இந்த வித்தியாசமான வியூகத்திற்கு டென்னிஸ் உலகில் பாராட்டுக்கள் குவிந்து வரு கின்றன. எனினும் இது உடல்ரீதியிலான தாக்குதல் என சில விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
அம்பானி மகன் திருமணத்தை புறக்கணித்த கோலி கொண்டாடும் ரசிகர்கள்
பிரதமர் மோடியின் நெருங் கிய நண்பரும், உலக கோடீஸ்வரர்கள் தரவரிசையில் முதன்மையான இடத்தில் இருப்பவ ருமான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை 12 அன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பை யில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், உலகப் பணக் காரர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், நடிகர் - நடிகைகள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் இந்நாள், முன்னாள் வீரர்கள் என பெரும்பாலானோர் பங்கேற் றனர். ஆனால் கிரிக்கெட் உலகின் நட்சத் திர பேட்டர்களில் ஒருவரான விராட் கோலி, அம்பானி மகன் திருமண விழா வை புறக்கணித்தார். அழைப்பிதல் கொடுக்கப்பட்டாலும் கோலி திருமண விழாவிற்கு செல்லவில்லை. கோலியின் இந்த முடிவிற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர் கள் சமூகவலைதளங்களில் பாராட்டு தெரி வித்து வருகின்றனர். நெட்டிசன்கள் மீம்ஸ் செய்து கொண்டாடி வருகின்றனர். கோலியை ரசிகர்கள் கொண்டாட காரணம் இந்திய அணி வீரர்களில் பெரும்பாலானோர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிரதமர் மோடி, முகேஷ் அம்பானி, அதானி ஆகியோரிடம் ஓரளவு இணக்கமாக இருக்கிறார்கள். ஆனால் கோலி அப்படி கிடையாது. கம்பீர் உட னான மோதலுக்கு பிறகு கோலி பாஜக சார்பை கண்டுகொள்ளாதது போல உள்ளார். கடந்த காலங்களில் ஜெய் ஷாவிடம் கைக்குலுக்காமல் கூட கோலி அவரை புறக்கணித்துள்ளார். அம்பானி தீவிர பாஜக ஆதரவாளர் என்பதால், அவரது மகன் திருமணத்தை புறக் கணித்ததால் கோலியை மீம்ஸ் உடன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அர சியல் களத்தில் மட்டுமின்றி கிரிக்கெட் களத்திலும் பாஜகவுக்கு எதிராக தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதனை அம்பானி மகன் திருமணத்திற்கு செல்லாத கோலியை பாராட்டும் ரசிகர்களின் மீம்ஸ் மூலம் காணலாம்.
ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தின் விலை ரூ. 63 ஆயிரமாம்
விளையாட்டு உலகின் முத ன்மையான தொடரான ஒலிம்பிக் தொடரின் 33ஆவது சீசன் வரும் ஜூலை 26 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான ஏற்பா டுகள் அனைத்தும் ஏறக்குறைய நிறைவு பெற்ற நிலையில், போட்டி கள் தொடங்குவது மட்டுமே பாக்கி. இந்நிலையில், ஒலிம்பிக் தொட ரில் வழங்கப்படும் ஒரு தங்கப் பதக்கத்தின் விலை தொடர்பான தக வல் வெளியாகியுள்ளது. இங்கி லாந்து நாட்டின் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டில் கொடுக்கப்படும் ஒரு தங்கப்பதக்கத் தின் விலை ரூ. 63,370 (758 அமெரிக்க டாலர்) என கூறப்பட்டுள் ளது. எனினும் கடந்த ஒலிம்பிக் தொட ரில் (டோக்கியோ - ஜப்பான்) வழங்க ப்பட்ட தங்கப்பதக்கத்தின் விலை யை விட, பாரீஸ் ஒலிம்பிக்கில் வழங்க ப்படும் தங்கப்பதக்கத்தின் விலை குறைவு தான். 2022இல் (நடந்தது 2021)நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வழங்கப்பட்ட ஒரு தங்கப்பதக்கத்தின் விலை ரூ.66,878 (800 அமெரிக்க டாலர்) ஆகும். ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தின் எடை 556 கிராம் ஆகும். இதில் 6 கிராம் மட்டுமே தங்கம் ஆகும். மீத முள்ள 550 கிராம் வெள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.