இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷாங்காவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக நிஷாங்கா அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக இலங்கை அணி ஏற்கனவே 4 வீரர்களை (டெஸ்ட்) இழந்த நிலையில், ஐந்தாவதாக இளம் தொடக்க வீரர் நிஷாங்காவை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.