இலங்கை - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உலகக்கோப்பை நடுக்கட்டத்தைத் தாண்டியுள்ள நிலை யில், திங்களன்று நடைபெறும் 30-ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரை தான் விளை யாடிய 5 லீக் ஆட்டங்களில் இலங்கை அணி 2-இல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-ஆவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கை அணியைப் போல 5 லீக் ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றியுடன் 4 புள்ளிகளை பெற்று இருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் பின்தங்கியுள்ளதால் 7-ஆவது இடத்தில் உள்ளது. அரையிறுதிக்கு முன்னேற வேண்டு மானால் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிக முக்கியமானது என்ற நிலையில், இலங்கை - ஆப்கானிஸ்தான் மோதும் ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை - ஆப்கானிஸ்தான்
இடம் : புனே, மகாராஷ்டிரா
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஒடிடி - ஹாட்ஸ்டார்
(இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும். ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)
இலங்கை அணியின் ஏமாற்று வேலை
இலங்கை அணியின் இளம் வீரர் பதிரனா (20 வயது) உலகக்கோப்பையின் தொடக்க லீக் ஆட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் ரன்களை வாரி வழங்கினார். ரன்களை வாரி வழங்குவதற்கு பயிற்சியாளர் கள் மற்றும் முன்னாள் வீரர்கள் போது மான ஆலோசனை வழங்காமல் ஆடும் லெவனில் இருந்து தூக்கப்பட்டு பதி ரனா பெஞ்சில் அமரவைக்க்கப்பட்டார். இந்த விவகாரம் பலத்த எதிர்ப்பை சம்பாரித்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக பதிரனா உலகக் கோப்பை தொடரில் இருந்தே விலகி யுள்ளார். அவருக்கு பதிலாக அனுபவ வீரரும், முன்னாள் கேப்டனு மான ஏஞ்சலோ மேத்யூஸ் கள மிறக்கப்பட்டுளார். இது சரியானது அல்ல... சிறிய தவறு செய்தாலும் இளம் வீர ரான பதிரனாவுக்கு அதிக பதற்ற நிலை உருவாகும். பதற்ற நிலையை போக்க ஆலோசனை மட்டுமே தீர்வாகும். சமீ பத்தில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடிய பதிரனா பல்வேறு தவறுகளை செய்தார். ஆனால் அந்த அணியின் கேப்டன் தோனியின் அதிக ஆலோசனை மற்றும் குழந்தை போன்ற அரவணைப்பு மூலம் ஐபிஎல் தொடர் முழுவதும் பதிரனாவை விளையாட வைத்தார். ஆனால் உலகின் பிரசித்திபெற்ற முன்னாள் சாம்பியன் அணியான இலங்கை அணியின் நிர்வாகம் சிறிய பார்ம் சொதப்பல்களுக்கு பதிரனாவை பெஞ்சில் அமரவைத்து அவரை காயப்படுத்தி உலகக்கோப்பை தொட ரில் இருந்தே துரத்தியுள்ளது. உண்மை யில் பதிரானாவுக்கு தோள்பட்டை காயமா? இல்லை, இலங்கை நிர்வாகத்தால் ஏற்பட்ட மன காயமா என தெரியவில்லை. எனினும் பதிரனா மீது எடுக்கப் பட்ட வெளியேற்ற அணுகுமுறை சரி யானது அல்ல. வெறும் 20 வயதுள்ள வீரரை இந்த வகையில் காயப்படுத்தி னால் சீக்கிரம் அவர் மனஅழுத்தத்திற்கு உள்ளவார். தொடர்ந்து கிரிக்கெட் விளையாட சிரமப்படுவர். அவரது பார்ம் முற்றிலும் சிதைந்து போகும். இதனை உணராமல் சுயநலத்துக்காக இளம் வீரரின் வாழ்க்கையில் விளை யாடுகிறது இலங்கை கிரிக்கெட் வாரியம்.
அடுத்து ஜப்பான்...
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வந்த மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி தொடரின் 4-ஆவது சீசன் சனியன்று நிறைவு பெற்ற நிலையில், 5-ஆவது சீசன் ஜப்பான் நாட்டின் அய்ச்சி - நகோயா நகரில் 2026-ஆம் ஆண்டு நடைபெறுகிறது.