தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி யைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலோ(20). சமீபத்தில் முடிந்த போட்டியில் வெற்றி பெற்றதற்காக இங்கிலாந்து நாட்டின் பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் கொண்டாட்டத்து டன் விருந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்ட மாண்ட்லி மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிகக் கடுமையாக தாக்கியுள்ளார். சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்த மாண்ட்லிக்கு மூளை யில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் சவுத்மீட் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். மாண்ட்லி குமாலோ 2020ஆம் ஆண்டு நடந்த இளையோர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.