games

img

சௌராஷ்ட்டிரா ரஞ்சி அணியின் இளம் பேட்ஸ்மேன் அவி பரோட் மரணம்

ரஞ்சிப் போட்டிகளில் செளராஷ்ட்டிரா அணிக்காக விளையாடி வந்த இளம் பேட்ஸ்மேன் அவி பரோட் மாரடைப்பால் காலமானார்.

சௌராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி பரோட் (29) மாரடைப்பால் காலமானார். 19-வயதுக்கு உட்பட்டோருக்கான  இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவி பரோட் 38 முதல் தரப் போட்டிகளில் விளையாடியவர். 

21 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியுள்ள அவி பரோட் மரணம், அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகா சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. 29-வயதே ஆன கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.  

இந்திய 19 வயதுக்குப்பட்டோர் கிரிக்கெட் அணிக்கு 2011 ஆம் ஆண்டில் அவி பரோட் கேப்டனாக இருந்தார். மேலும் 2019-20ஆம் ஆண்டு ரஞ்சித் தொடர்களில் சௌராஷ்டிரா அணி வெற்றிபெறக் காரணமாக இருந்த இவர், ஹரியானா மற்றும் குஜராத் அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

;