games

img

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில், கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படவுள்ளார். துணை கேப்டன் பதவி கே.எல். ராகுலுக்கு வழங்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் விராட் கோலி பங்கேற்பதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில வாரங்கள் ஓய்வெடுத்துவிட்டு 2 வது டெஸ்டில் மட்டும் அவர் விளையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

;