ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது சீசன் டி-20 உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான “சூப்பர்12” சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் இரண்டு (பாகிஸ்தான், நெதர்லாந்து) “சூப்பர்12” ஆட்டங்களிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, பல்வேறு காரணங்களால் 3-வது ஆட்டத்தில் (தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக) சொதப்பியது. தோல்விக்கான காரணங்களையும் அதன் முழு விபரத்தை பற்றி பார்ப்போம்: 1. பவுன்சர் ஆடுகளம் என்று தெரிந்தும் தொடக்கத்தில் டெஸ்ட் ஆட்டம் போல பேட்டிங்கை தொடங்கியது. 2. பவுன்சர் பந்துகளை தேவையில்லாமல் அடித்து ஆட முயற்சித்தது. 3. ரன் குவிக்க கடுமையாக திணறி வரும் ராகுலை ஆடுலெவனில் இன்னும் வைத்திருப்பது.
4. விக்கெட் சரிவை தடுக்க தடுப்பாட்டத்தை கையில் எடுக்காமல் அதிரடி முனைப்பில் இருந்த கோலி, ஹர்திக், தினேஷ் கார்த்திக்கின் செயல் மோசமானது. 5. போதுமான பேட்டிங் அனுபவம் இருந்தும் அக்சர் படேலை பெஞ்சில் வைத்தது. 6. அனுபவம் இல்லாத தீபக் ஹூடாவை களமிறக்கியது. தீபக் ஹூடா தங்க முட்டையுடன் (0) ஆட்டமிழந்தார். பேட்டிங் தான் சொதப்பினார் பந்துவீச்சில் ஒரு சோதனை முறையில் கூட தீபக் ஹூடாவை பயன்படுத்தவில்லை. 7. தீபக் ஹூடாவை பேட்டிங்கிற்கு மட்டும் அணியில் கொண்டுவந்திருந்தால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்டை களமிறக்கியிருக்கலாம். 7. வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி தங்களது திறமையை வெளிப்படுத்திய பொழுதிலும், பீல்டிங் சொதப்பல் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. 8. பல முக்கியமான கேட்சுகளை தவறவிட்டது, ரன் அவுட்டுகளை கோட்டை விட்டது என பல்வேறு காரணங்கள் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இன்றைய ஆட்டங்கள்
ஆப்கானிஸ்தான்- இலங்கை நேரம் : காலை 9:30 மணி இங்கிலாந்து - நியூசிலாந்து நேரம் : மதியம் 1:30 மணி இரண்டு ஆட்டங்களும் : பிரிஸ்பேன் நகரில்
மழை வருமா?
பிரிஸ்பேன் நகர வானிலைப்படி செவ்வாயன்று 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். ஆனாலும் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. பிற்பகலில் தான் ஆட்டம் நடைபெறும் என்பதால் மழையால் ஆட்டத்திற்கு சிறிதளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.