games

img

ரஞ்சி கோப்பை ஒரே இன்னிங்சில் 880 ரன்கள் குவித்த ஜார்க்கண்ட்

நாட்டின் முதன்மையான முதல்தர போட்டியான ரஞ்சி கோப்பையின் பிரி காலிறுதி ஆட்டத்தில் நாகலாந்து - ஜார்க்கண்ட் அணிகள் மோதின. டாஸ் வென்ற நாகலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.  முதலில் களமிறங்கிய ஜார்க் கண்ட் அணி முதல் இன்னிங்சில் 203.4 ஓவர் களில் 880 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ரா இரட்டை சதமடித்து (266 ரன்கள்) அசத்தினார். ஷாபாஸ் நதீம் (177), விராட் சிங் (107) ஆகியோரும் சதமடித்தனர். ரஞ்சி கோப்பை வரலாற்றில் இது 4-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு 1994-ஆம்  ஆண்டு ஆந்திராவுக்கு எதிராக ஹைதராபாத் அணி 944/6 ரன்கள்  விளாசியதே முதல் சாதனை யாக உள்ளது. 2 மற்றும் 3-வது இடங் களில் தமிழ்நாடு மற்றும்  ஹோல்கர்  (அப்போதைய மத்தியப்பிரதேசம்) அணிகள் உள்ளன.

2.கோவாவுக்கு எதிராக தமிழ்நாடு - 912/6 ரன்கள் (1989) 3.மைசூருக்கு எதிராக ஹோல்கர்-912/8 ரன்கள் (1946)