உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின் 33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் ஸ்வப்னில் குசலே வெண்கலம் வென்றார்
ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை (ஷாட்) துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து வியாழனன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஸ்வப்னில் குசலே தொடக்கத்தில் 6 நிலைகளை (2 சுற்று) அபாரமாக சுட்டு வீழ்த்தினார். ஆனால் நடுக்கட்டத்தில் பார்ம் இழந்த ஸ்வப்னில் குசலே சற்று தடுமாறிய நிலையில், புள்ளிகள் குவிக்க முடியாமல் அவர் திணறினார். சீன வீரர் லியு, உக்ரைன் வீரர் கிலீஷ் ஆகி யோர் துடிப்பான ஆட்டத்தை வெளிப் படுத்த ஸ்வப்னில் குசலே 451.4 புள்ளி களுடன் மூன்றாவது இடத்துடன் வெளியேற்றப்பட்டார். இறுதியில் சீன வீரர் லியு 463.6 புள்ளிகளுடன் தங்கப்பதக்கதை யும், உக்ரைன் வீரர் கிலீஷ் 461.3 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை யும், இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே 451.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தி யாவின் பதக்க எண்ணிக்கை 3 ஆக (மூன்றும் வெண்கலம்உயர்ந்துள்ளது.
தங்கம் வென்று வரலாறு படைத்த குட்டி நாடான கவுதமாலா
மத்திய அமெரிக்காவில் உள்ள குட்டி நாடான கவுதமாலாவில் வெறும் ஒன்றரை கோடி அளவில் மக்கள் வசித்து வருகின்றனர். ஒலிம்பிக் தொடரில் கவுதமாலா நாடு பதக்கப்பட்டியலில் இடம்பெறுவது அரிதான விஷயம் என்ற நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் அடுத்தடுத்து இரண்டு பதக்கங்களை வென்று, ஒலிம்பிக் தொடரில் தனக்கென்று புதிய வரலாறு படைத்துள்ளது. எனினும் கவுதமாலா நாடு இப்பொழுது மட்டும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை. ஏற்கெனவே கடந்த 2021 லண்டன் (இங்கிலாந்து) ஒலிம்பிக் தொடரில் வெள்ளி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் அரங்கத்தை அதிர வைத்த துருக்கி வீரர்
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செர்பியா - துருக்கி நாடு கள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செர்பியா 16-14 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. துருக்கி அணி தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் வென்றாலும், துருக்கி அணியில் விளையாடிய யூசப் டிகெக், தனது பயமரியா செயல்பாடு மூலம் பாரீஸ் ஒலிம்பிக் அரங்கத்தை நடுங்க விட்டுள்ளார். வேற லெவல்... துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் சிறப்பு லென்ஸ் (கண்ணிற்கு), பெரிய காதுறை, கைகள் நடுங்காமல் இருக்க பெல்ட் போன்றவற்றை அணிவார்கள். இதுபோக துப்பாக்கி குண்டு துளைக் காத படி கவச உடை ஒன்றும் அணிவார் கள். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்குபெற வேண்டுமானால் இவ்வ ளவு பாதுகாப்பு அம்சங்களை கடைப் பிடிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் துருக்கி வீரர் யூசப் டிகெக் எவ்வித பாதுகாப்பு கவசங்களும் அணியாமல் வழக்கமாக அணியும் கண்ணாடியுடன், சாதாரண டி-சார்ட் அணிந்து துப்பாக்கிச் சுடுதலில் மிரட்டினார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்றால் எவ்வித பதற்றம் இல்லாமல் ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மிக சாதாரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பாரீஸ் அரங்கத்தில் பலத்த பாராட்டுகளை பெற்றது.