games

img

ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகிய நியூசிலாந்து வீரர்  

கொரோனா தொற்று காரணமாக நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்க் சேப்மேன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரிலிருந்து விலகியுள்ளார்.    

நியூசிலாந்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மாங்கனியில் வருகிற செவ்வாய் கிழமை தொடங்க இருக்கிறது.  அதனைதொடர்ந்து 2ஆவது மற்றும் 3ஆவது போட்டிகள் ஏப்ரல் 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.  

இதில் பங்கேற்பதற்கு முன் வீரர்களுக்கு நடந்த ஆன்டிஜென் பரிசோதனையில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்க் சேப்மனுக்கு (27) கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் மற்ற வீரர்களுக்கு பாதிப்பு இல்லை என நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார்.      

இதனை தொடர்ந்து சேப்மனுக்கு பதிலாக மற்றொரு பேட்ஸ்மேனான ஜார்ஜ் ஒர்க்கர் அணியில் சேர்க்கப்பட உள்ளார். நியூசிலாந்துக்காக கடைசியாக 2018ம் ஆண்டில் விளையாடி இருந்த ஜார்ஜ் நாளை நடைபெற உள்ள கிரிக்கெட் பயிற்சியை முன்னிட்டு அணியில் இடம் பெறுகிறார்.