15-வது சீசன் ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதின. மும்பையில் உள்ள பாட்டில் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ஆட்டம் பிரச்சனையின்றி நிறைவு பெற்றா லும், ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்த பொழுது 19-வது ஓவரில் விநோத சம்பவம் ஏற்பட்டது. இளம் அதிரடி வீரர் ரியான் பராக் இருக்கும்போது 6-வது வீரராக அஸ்வின் அவருக்கு முன்பு களமிறங்கியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய நிலையில், 19-வது ஓவரில் 2 பந்துகளுக்குப் பிறகு களத்தை விட்டு அஸ்வின் திடீரென வெளி யேறினார். காயம் எதுவும் ஏற்படவும் இல்லை. ஆனால் ரிடையர்ட் ஹர்ட் முறையில் அஸ்வின் வெளியேறியதாகக் கணக்கில் கொள்ளப் பட்டது. கடைசி ஓவரில் ரியான் பராக் அதிரடி யாக விளையாடி ஒரு சிக்ஸருடன் 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இன்னிங்ஸ் பிரச்சனையின்றி நிறைவு பெற்றாலும் அஸ்வினின் ரிடையர்ட் ஹர்ட் செயல் கிரிக்கெட் உலகில் புதிய விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி யுள்ளது. மைதானத்தில் ரன் எடுக்கத் தடு மாறும் ஒரு வீரர், ஆட்டமிழக்காமல், காயம் ஏற்படாமல் ஆட்டத்தை விட்டு வெளியேற லாமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
சரியா? தவறா?
பொதுவாக கிரிக்கெட் விளையாட்டில் களத்தில் இருக்கும் பேட்டர் ஒருவர்காயம் இல்லாமல் மற்றும் உடல்நிலை குறைவு எதுவும் ஏற்படாமல் பெவிலியன் திரும்ப முடியாது. அவ்வாறு விதிகள் எதுவும் இல்லை. ராஜஸ்தான் வீரர் அஸ்வின் செய்தது தவறானது தான். அதாவது அஸ்வினால் அதிரடியாக விளையாட முடியவில்லை. கடைசி ஓவரில் அவரால் போதுமான அளவுக்கு ரன் குவிக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு தான் அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் அவரை அழைத்துள்ளனர். இது நிர்வாகத்தின் தனிப்பட்ட விதி. கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டது அல்ல என்பது தான் உண்மையான விஷயம். தற்போதே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் துரித நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அஸ்வினின் செயலை இனி வரும் ஆட்டங்களில் இதைப் பல அணிகள் பின்பற்றும் வாய்ப்பு ஏற்படும் என்பது குறுப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டம்
சென்னை - பெங்களூரு (22)
இடம் ; பாட்டில் மைதானம், மும்பை
நேரம் : இரவு 7:30 மணி
சேனல்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள் மற்றும் ஹாட் ஸ்டார் கணக்குகளில்