ஆசியாவின் பிரபல சர்வதேச டென்னிஸ் தொடரான கொரிய ஓபன் டென்னிஸ் தொடர் தற் போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் இரட்டையர் பிரி வில் யாரும் எதிர்பாராத வகையில் காலி றுதி வரை முன்னேறியது இந்தியாவின் யுகி பாம்பரி - சாகேத் மைனேனி ஜோடி. வியாழனன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அதிரடிக்கு பெயர் பெற்ற ரோட்ரிக்ஸ் (கொலம்பியா) - டியா கோ (ஈகுவடார்) ஜோடியை, தரவரிசை இல்லாமல் களமிறங்கிய யுகி பாம்பரி - சாகேத் மைனேனி ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை யிறுதிக்கு முன்னேறியது. லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி ஜோடியை போன்று திடமான வீரர்கள் இல்லாமல் கடந்த 10 வருடங்களாக இந்திய டென்னிஸ் உலகம் திணறி வரும் நிலையில், அவர்களது இடத்தை யுகி பாம்பரி - சாகேத் மைனேனி பிடிப் பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.