கேமராவில் தெரிய வேண்டும் என்பதற்காக சச்சினை தள்ளி உட்கார சொன்ன ஜெய்ஷா
உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வான்கடே மைதானத்தில் புதனன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் போட்டியை நேரில் காண வந்திருந்தனர். இவர்களுக்கு நடுவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா அமர்ந்திருந்தார். கால்பந்து உலகின் முக்கியமானவர் என்ப தால் டேவிட் பெக்காமை, போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அடிக்கடி டிவி மற்றும் மைதான திரையில் காண்பித்தது. சச்சின் - டேவிட் பெக்காம் பேசிக்கொண்டிருக்கும் நிகழ்வை ஒளி பரப்ப அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கேமராவை திருப்பியது. இதனை மைதான திரையில் கண்ட ஜெய் ஷா, சச்சின் - டேவிட் பெக்காம் பேசியதை நிறுத்த சொல்லி கேமராவை பார்த்து கை அசையுங்கள் என்றும், கேமராவில் தனது முகம் தெரி யாததால் சச்சினை தள்ளி உட்கார சொன்னார். ஜெய் ஷாவின் இந்த செயலால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவன கேமரா ஊழியர்கள், கேமராவை ரசிகர்களை நோக்கி திருப்பினர். பிரதமர் மோடி உள்நாடு மட்டுமின்றி, உலக அரங்கிலும் கேமரா போஸ்க்காக பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், விளையாட்டு உலகிலும் கேமரா போஸ் சர்ச்சை யை உருவாக்கியுள்ளார் அமித் ஷா மகன் ஜெய் ஷா.
தனக்கு கீழே தான் எல்லோரும் இருக்க வேண்டும் என நினைக்கிறாரா ஜெய் ஷா?
இந்திய கிரிக்கெட் வாரி யத்தின் (பிசிசிஐ) தலைவராக, உலகக்கோப்பையை (1983) பெற்றுத் தந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி உள்ள நிலையில், கிரிக்கெட் பின்புலம் இல்லாத ஜெய் ஷா செயலாளராக உள்ளார். பிசிசிஐ-யின் அனைத்து கட்டுப்பாடும், பொறுப்பும் ரோஜர் பின்னி கையில் இருந்தாலும் ஜெய் ஷா தான் தலை வரை போல உள்ளார். காரணம் தனது தந்தை ஒன்றிய உள்துறை அமைச்ச ராக (அமித் ஷா) இருப்பதால்தான். முக்கியமாக மும்பையில் நடை பெற்ற அரையிறுதி ஆட்டத்தை காண(?) ரோஜர் பின்னி வந்தாரா என்றே தெரியவில்லை. ஆளவே காணோம். ஆனால் ஜெய் ஷா மட்டும் உலகக்கோப்பையின் பெரும்பாலான ஆட்டங்களிலும் தலைகாட்டினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக இருக்கும் நிலையில், தனக்கு கீழே தான் எல்லாரும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரோஜர் பின்னி யை ஜெய் ஷா திட்டமிட்டு ஓரங்கட்டி னாரா? என்ற சந்தேகம் வலுத் துள்ளது.
பணக்காரர்கள் யாரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கவில்லை
போட்டுடைத்த தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடை பெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளை பணக்காரர்கள் யாரும் பணம் கொடுத்து வாங்கவில்லை என ஆர்பிஜி குழும தலைவரும், நாட்டின் பிரபல தொழி லதிபருமான ஹர்ஷ் கோயங்கா குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில்,” தனது நண்பர்களாக இருக்கும் தொழிலதிபர்கள் யாரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்காமல், இலவச பாஸ் மூலம் போட்டியைக் காண இருக் கின்றனர். பணக்காரர்கள் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்காதது முரணாக உள்ளது “எனக் கூறியுள்ளார். ஹர்ஷ் கோயங்காவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டுகள் பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள், ஆளும் பாஜகவிற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தாராளமாக கிடைத்தன. சாமானியர்களுக்கு கிடைக்க எந்த வழிவகைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் செய்யவில்லை என்ற சர்ச்சை மிகுந்த கருத்துக்கள் ஏற்கெனவே எழுந்த நிலையில், தற்போது ஹர்ஷ் கோயங்காவின் குற்றச்சாட்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகனின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தீவிர கிரிக்கெட் ரசிகரான ஹர்ஷ் கோயங்காவிற்கு சொந்தமாக ஐபிஎல் அணி (லக்னோ சூப்பர் ஜெயன்ட்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.