games

img

லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீர் சர்ச்சை பேச்சு

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த வாரம் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது.  இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான காம்பீர் தனது அணி வீரர்களை மிரட்டும் நோக்கில் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். செவ்வாயன்று நடைபெற்ற 57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணி குஜராத்திடம் 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அதாவது எளிய இலக்கை (144) துரத்த முடியாமல் தோல்விகண்டது. போட்டி முடிந்த பின்பு லக்னோ அணி வீரர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கினார். அதில் பெரும்பாலும் மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். முக்கியமாக “பலவீனமாக இருந்தால் அணியில் இடமில்லை” என வெளிப்படையாக எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது. 

உள்ளூர் போட்டிகளில் மிரட்டலாமா?

ஐபிஎல் போட்டி என்பது ஒரு வகை உள்ளூர் போட்டி தான். அனைத்து நாட்டைச்சேர்ந்த வீரர்களும்  பங்கேற்கும் மாறுபட்ட தொடர். ஆடும் லெவனின் மாற்றத்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு  அணியின் பலம் மாறும். இதனால் எந்த  அணி வெற்றி பெறும் என முன்கூட்டியே கணிக்க முடியாது,  ஆருடத்திற்கும் வேலை இல்லை. ஐபிஎல்  தொடரில் 70% இளம் வீரர்கள் தங்களின் எதிர்கால விளையாட்டு வாழ்க்கையை நம்பி ஐபிஎல் தொடரில் இரவு பகலாக  உழைத்து வருகின்றனர்.  இத்தகைய கிளைமாக்ஸ் உள்ள  ஐபிஎல் தொடரில்  வெற்றி, கோப்பை என்ற ஒரே  நோக்கத்துக்காக அணியில் உள்ள  அனைத்து வீரர்களையும் ஆலோசகர் என்ற பெயரில்  கம்பீர்  மிரட்டுவது தவறானது. கம்பீரின் செயலால் இளம் வீரர்கள் மட்டுமல்ல சர்வதேச வீரர்கள் கூட மனதளவில் சோர்வு கண்டு பார்ம் பிரச்சனையை இழப்பார்கள். அடுத்த சீசனில் கம்பீர் இருக்கும் அணியை வேண்டாம் என்று கூட கூறுவார்கள்.

வெறும் ஆலோசகருக்கு இவ்வளவு அதிகாரமா?

லக்னோ அணிக்கு கம்பீர் வெறும் ஆலோசகர் தான். பயிற்சி யாளர் அந்தஸ்து இல்லாதவர். அணிக்கு மாறுபட்ட ஆலோச னைகளை மட்டுமே கம்பீர் வழங்க முடியும். ஆனால் தலைமை பயிற்சியாளர் போல  உத்தரவு கருத்துக்களை வழங்க  முடியாது. இந்திய அணியின் முன்னாள் வீரர், பாஜக எம்.பி., அணியின் ஆலோசகர் என்ற அதிகார வெறி ஆதிக்கத்தை  கம்பீர் லக்னோ அணியை தனது கட்டுக்குள் வைத்துள் ளது தெளிவாக தெரிகிறது.

புதிதாக கட்டமைக்கப்பட்ட அணி போன்று அல்லாமல் ஐபிஎல் தொடரில் அனுபவமிக்க  அணியைப் போல அபாரமாக விளையாடி வருவதை கம்பீர் பாராட்ட வேண்டும். ஆனால் ஒரே  ஒரு போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் அணி வீரர்களை மிரட்டுவது தவறானது.

ஐபிஎல்
இன்றைய ஆட்டங்கள்

சென்னை - மும்பை
இடம் : வான்கடே மைதானம், மும்பை
நேரம் : இரவு 7:30 மணி