டி-20, ஒருநாள் என இரண்டு விதமான தொடர்களில் பங்கேற்க இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், திங்களன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது.
ஸ்கோர் கார்டு
இலங்கை : 173 (50) இந்தியா : 174/0 (25.4)
(10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி)
ஆட்டநாயகி: ரேணுகா சிங் (இந்தியா - 4 விக்.)
டிஎன்பிஎல் இன்றைய ஆட்டம்
மதுரை - திருநெல்வேலி
இடம் : திண்டுக்கல் (நத்தம் - என்பிஆர் மைதானம்)
என்பிஆர் மைதானம் செல்ல
* திண்டுக்கல்லில் இருந்து வருபவர்கள் : திண்டுக்கல் - நத்தம் - சிங்கம்புணரி சாலையில்
(எஸ்ஹெஜ் - 35) உள்ள உலுப்பகுடிக்கு ஒரு கிமீ முன்னதாகவே உள்ளது.
* மதுரை, நத்தம், சிங்கம்புணரி வழியாக வருபவர்கள் : நத்தம் பேருந்து நிலையத்தில் இருந்து இடதுபுறமாக 6 கிமீ தொலைவில் உள்ளது. திண்டுக்கல் செல்லும் பேருந்தில் செல்லலாம்.