ராஞ்சி டெஸ்ட்
இந்திய அணி வெற்றிக்கு 192 ரன்கள் இலக்கு
5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் 3 டெஸ்ட் போட்டி முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், 4-ஆவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் வெள்ளியன்று தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் கள மிறங்கிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் (122) அபார சதத்தால், முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிக பட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து தனது முதல் இன்னி ங்ஸை தொடங்கிய இந்திய அணி இங்கிலாந்து அணியை போலவே தடு மாறிய பொழுதிலும், இளம் வீரரும், விக்கெட் கீப்பருமான ஜுரல் (90) மற்றும் ஜெய்ஸ்வால் (73) ஆகியோ ரின் பொறுப்பான ஆட்டத்தால் 3-ஆவது நாளின் மதிய இடைவேளைக்கு முன்பு 103.2 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பசீர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அஸ்வின் (5), குல்தீப் (4) சுழலை சமாளிக்க முடியாமல் 53.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இந்திய அணியின் வெற்றி இலக்காக 192 ரன்கள் நிர்ணயம் செய்தது. எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 8 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி யின் வெற்றிக்கு 2 நாட்கள், 10 விக்கெட்டு கள் கைவசம், 152 ரன்கள் தேவை என்ற நிலையில், திங்களன்று தொடர்ந்து 4-ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
துபாய்
இலங்கை கேப்டன்
வனிந்து ஹசரங்கா இடைநீக்கம்
கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையே டி-20 ஆட்டம் நடைபெற்றது. இலங்கை மண்ணில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.
120 பந்துகளில் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் கடைசி ஓவரில் நோ-பால் (இடுப்பு) பிரச்சனை காரணமாக இலங்கை கேப்டன் வனிந்து ஹசரங்காவுக்கும், லெக் நடுவராக இருந்த லிண்டன் ஹன்னிபாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக துரித விசாரணை மேற்கொண்ட சர்வதேச கிரிக்கெட் வாரியம் வனிந்து ஹசரங்காவை 2 போட்டிகளில் இடைநீக்கம் செய்தும், 50% அபராதமும் (போட்டிக் கட்டணம்)விதித்தது.
இன்று 4-ஆம் நாள் ஆட்டம்
இந்தியா - இங்கிலாந்து
நேரம் : காலை 9:30 மணி
இடம் : ஜேசிஏ மைதானம், ராஞ்சி, ஜார்க்கண்ட்
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா
புரோ கபடி 2024
இன்று எலிமினேட்டர் ஆட்டங்கள்
குறுகிய காலத்தில் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்த புனே, ஜெய்ப்பூர், தில்லி, குஜராத், ஹரியானா, பாட்னா ஆகிய அணிகள் குவாலிபையர் சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில், திங்களன்று குவாலிபையர் ஆட்டங்களின் எலிமினேட்டர் பிரிவு ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், முதல் எலிமினேட்டர் ஆட்டத்தில் தில்லி - பாட்னா அணிகளும், இரண்டாவது எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் - ஹரியானா அணிகளும் மோதுகின்றன. எலிமினேட்டர் ஆட்டங்களில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய குவாலிபையர் ஆட்டங்கள்
எலிமினேட்டர் - 1
தில்லி - பாட்னா
நேரம் : இரவு 8 மணி
எலிமினேட்டர் - 2
குஜராத் - ஹரியானா
நேரம் : இரவு 9 மணி
இடம்: கச்சிபலி மைதானம், ஹைதராபாத், தெலுங்கானா
சேனல்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார் (ஒடிடி)