games

img

டிரெஸ்ஸிங் ரூமில் “ஷூட்டிங்”

13ஆவது சீசன் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வரை தொடர்ந்து 10 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் அசத்தலாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை இழந்தது.

இந்தியாவில் உலகக்கோப்பை  தொடரின் ஏற்பாடுகள், மைதான ஒதுக்கீடு, டிக்கெட் விற்பனை என  அனைத்திலும் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. முக்கியமாக இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்  றால் பிரதமர் மோடி அரசியல் ஆதாய  முயற்சியாக ஒரு பெரிய பிரம்மாண்ட  நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பாடு செய் துள்ளார். அதாவது ஒவ்வொரு வீரர் களிடமும் உலகக்கோப்பையை  வழங்கி அவர்களுடன் மோடி உரை யாடுவது போலவும், ஒன்றிய பாஜக  அரசின் முயற்சி மற்றும் தனது (மோடி) செயலால் இந்தியா உலகக்  கோப்பை வென்றது போல பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயிற்சி எடுத்து பிர தமர் மோடி அகமதாபாத் மைதானத்  திற்கு சென்றார்.

மேடை நாகரிகத்தை  புதைத்த மோடி

இந்திய அணி தோல்வியை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத் தில் பிரதமர் மோடி அகமதாபாத் மைதானத்திற்கு வருகை தந்த பொழுது, அவரை நோக்கி கேமரா  திரும்ப ரசிகர்களை நோக்கி புன்ன கைத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்  தது போல அவர் கையை அசைத் தார். இந்தியா தோற்கப் போகிறதே என்ற எண்ணத்தில் ரசிகர்கள் துவண்டு கிடந்த நேரத்தில் மோடி யின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்பு  கிளம்பியது. தொடர்ந்து ஆஸ்திரே லிய கேப்டன் கம்மின்ஸிடம் கோப்பை  வழங்கும் பொழுது மேடை நாகரி கத்தை அடியோடு புதைத்தார் மோடி.

அரசியல் ஷூட்டிங்
2024 மக்களவைத் தேர்தலுக் கான பாஜகவின் தேர்தல் பிரச்சா ரத் திட்டத்தில் 2 திட்டம் முக்கியமா னது. ஒன்று உலகக்கோப்பை. மற்  றொன்று ராமர் கோவில். இந்திய அணி யின் தோல்வியால் மோடியின் உல கக்கோப்பை திட்டம் அனைத்தும்  தவிடு பொடியாகிய நிலையில், இறுதி முயற்சியாக இந்திய வீரர்கள்  டிரெஸ்ஸிங் ரூமிற்கு தனது கேமரா  மற்றும் வீடியோகிராபர் டீமுடன் பிர தமர் மோடி சென்றார். அவருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்  ஷாவும் சென்றார்.

முதலில் இந்திய அணியின் மூத்த  வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் ஆறு தல் வார்த்தைகள் பேசி அவர்களது கைகளை பற்றினார். ஆனால் ரோஹித், கோலி இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மோடி  கையை எடுக்கும் முன்னரே இரு வரும் கையை எடுத்து நழுவ முயற்சி செய்தனர். இதனால் கோபமடைந்த  மோடி கோபமாக சைகை காட்டி னார். அதன்பிறகு முகமது ஷமியை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.  அவரும் ஏதும் பேசாமலிருக்க மோடி  கோபமாக டிரெஸ்ஸிங் ரூமை விட்டு  வெளியேறினார். உலகக்கோப்பை யில் மோடியின் கடைசித் திட்டமும் சுக்குநூறானது.