games

img

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023

பதக்க வேட்டையை ஆரம்பித்த இந்தியா

ஒலிம்பிக் தொடருக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டுத் தொடராக இருப்பது ஆசிய விளையாட்டுப் போட்டியாகும். இந்த ஆசிய விளையாட்டு தொடரின் 19-வது சீசன் சீனாவின் பெரிய நகரங்களில் ஒன்றான ஹாங்சோ நகரில் சனியன்று தொடங்கியது.  இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 பதக்கம் ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளிலேயே இந்திய வீரர் - வீராங்கனைகளின் அசத்தலான செயல்பாட்டால் இந்தியாவுக்கு 5 பதக்கம் கிடைத்துள்ளது.

1. வெள்ளி : மகளிர் 10 மீ ஏர் ரைபிள் அணி  பிரிவில் ஆஷி சவுக்‌ஷி, மெகுலி கோஷ், ரமிதா ஆகியோர் அடங்கிய இந்திய இணைகள் வெள்ளிப்பதக் கம் வென்றன. 2. வெள்ளி : ஆடவர் துடுப்பு படகுப் போட்டியில் (லைட் வெயிட்) இந்திய வீரர்களான அர்ஜுன் - அரவிந்த் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.  3.வெள்ளி : ஆடவர் துடுப்பு படகுப் போட்டியில் (எலைட்) 8 பேர் கொண்ட இந்திய வீரர்கள் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.  4. வெண்கலம் : ஆடவர் துடுப்பு படகுப் போட்டியில் (ஃபேர்) இந்திய வீரர் களான பாபு லால் - ராம் லெக் ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது.  5. வெண்கலம் : மகளிர் 10 மீ ஏர்  ரைபிள் தனிநபர் பிரிவில் இந்திய  வீராங்கனை ரமிதா வெண்கலப்பத க்கம் வென்றார்.

சீனாவுக்கு முதல் பதக்கம்

நடப்பு சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டியில், போட்டியை நடத்தும் சீனா முதல் பதக்கத்தை வென்றது. மகளிர் துடுப்பு படகுப் போட்டியில் சீனாவின் ஜோ - கியூ ஜோடி பதக்கம் வென்றது. முதல் வெள்ளிப்பதக்கத்தை உஸ்பெகிஸ்தானின் இஸ்லாவோமோவா - டாக்மாடோவா ஜோடியும், முதல் வெண்கலப்பதக்கத்தை இந்தோனேசியாவின் செலிசியா - ரஹ்மா ஜோடி வென்றது.

இறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மகளிர் கிரிக்கெட் போட்டி பிரிவில் (டி-20) ஞாயிறன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இந்திய வீராங்கனைகளின் மிரட்டலான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி 17.5 ஓவர்களில் 51 ரன்களுக்குள் சுருண்டது. 120 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எளிதாக எட்டி இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இலங்கை அணி வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய நிலையில், இலங்கை - இந்தியா அணிகள் மோதும் இறுதி ஆட்டம் திங்களன்று காலை 11:30 நடைபெறுகிறது. இந்திய மகளிர் அணி இறுதிக்கு முன்னேறியதன் மூலம் அதிகபட்சமாக தங்கப்பதக்கமும், குறைந்தபட்சமாக வெள்ளிப்பதக்கமும் வெல்ல வாய்ப்புள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா 2023

இன்னும் 9 நாட்கள்

கிரிக்கெட் உலகின் 2-வது உலகக் கோப்பை 1979-இல் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கி லாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, கனடா என 8 அணிகள் கள மிறங்கிய நிலையில், இந்திய அணி வழக்கம் போல குரூப் சுற்றோடு வெளியேறியது.  அதே போல முதல் உலகக்கோப்பையில் 2-ஆம் இடம் பிடித்த ஆஸ்திரேலிய அணியும் குரூப் சுற்றோடு நடையை கட்டியது. வழக்கம் போல ஆதிக்கம் செலுத்திய நடப்பு சாம்பியன் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இறுதிக்கு முன்னேறியது. முதல் உலகக்கோப்பையில் அரையிறுதியுடன் வெளியேறிய இங்கிலாந்து அணி, இந்த சீசனில் எழுச்சி கண்டு இறுதிக்கு முன்னேறியது. எனினும் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஆதிக்கத் தை சமாளிக்க முடியாமல் 92 ரன்கள் வித்தி யாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவ, மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.  சாம்பியன் பட்டம் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு ரூ.1.80 லட்சம் பரிசுத் தொகையும், 2-வது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.72 ஆயிரமும் வழங்கப்பட்டது.