games

img

விளையாட்டு...

பெர்த் டெஸ்ட் : வலுவான நிலையில் இந்தியா

5 போட்டிகளைக் (பார்டர் - கவாஸ் கர் டிராபி) கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலிய நாட்டின் பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கி யது. ஆஸ்திரேலியாவின் ஹாசில்வுட் (4 விக்கெட்டுகள்), ஸ்டார்க் (2 விக்கெட்டு கள்), மிட்சல் மார்ஷ் (2 விக்கெட்டுகள்), கம்மின்ஸ் (2 விக்கெட்டுகள்) ஆகி யோரின் மிரட்டலான வேகத்தை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிக பட்சமாக நிதிஷ் 41 ரன்கள் எடுத்தார். இந்திய அணியை விரைவாக சுருட்டி விட்டோம் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியாக களமிறங்கிய ஆஸ்திரே லிய அணி மீது பும்ரா பதில் தாக்குதல் தொடுத்தார். பும்ரா உடன் ஹர்ஷித் ராணா, சிராஜ் ஆகியோரும் தங்க ளது வேகப்பந்துவீச்சில் மிரட்ட, ஆஸ்தி ரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 51.2 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்சல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய  அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே போல ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டு களையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 46 ரன்கள் முன்னிலையுடன் இரண் டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நிதான வேகத்தில் ரன்  குவித்தது.  தொடக்க வீரர்களாக கள மிறங்கிய ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் ஜோடி ஆஸ்திரேலிய வீரர்களின் மிரட்டலான பந்துவீச்சை திடமாக கணித்து, பெர்த் மைதானத்தில் நங்கூரம் அமைத்தனர்.  இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 57 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றுள் ளது. ஜெய்ஸ்வால்  (90 ரன்கள்), கே.எல். ராகுல் (62 ரன்கள்) களத்தில் உள்ளனர். ஞாயிறன்று தொடர்ந்து 3ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

பும்ராவால் தப்பி பிழைத்த கம்பீர்

முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஜடேஜா, ஆகாஷ் தீப், சர்பிராஸ் கான் உள்ளிட்ட சர்வதேச அனுபவம் உள்ள வீரர்களை பெஞ்சில் அமர வைத்து, தேவ்தத் படிக்கல், ஜுரல்,  நிதிஷ், ஹர்ஷித் ராணா ஆகிய பெரியளவு சர்வதேச அனுபவம் இல்லாத இளம் வீரர்களை கம்பீர் ஆடும் லெவனாக கள மிறக்கினார். இந்திய அணி பேட்டிங் செய்து களமிறங்கிய பொழுது, ஆடும்  லெவனின் வீரர்கள் விபரத்தை பார்த்து  இந்திய கிரிக்கெட் மட்டுமன்றி ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே அதிர்ந்தது. காரணம் சொந்த மண்ணில் முரட்டு பலத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியை அனுபவம் இல்லாத இளம் வீரர்களோடு எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ? என்ற விமர்சனங்கள் டுவிட்டர் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் கடுமையாக எதிரொலித்தன. இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பி 150 ரன்னில் சுருண்ட பின் ஆடும் லெவன் தேர்வு தான் காரணம் என கம்பீரை இந்திய ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். ஆனால் நல்ல வேலையாக பும்ரா அசத்தலாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை ரன் குவிக்க முடியாமல் கட்டுப் படுத்தினார். இல்லையென்றால் கம்பீரின் நிலைமை மிக மோசமடைந்துஇருக்கும். 

புரோ கபடி 2024

இரண்டு ஆட்டங்களும்: நொய்டா மைதானம், உத்தரப்பிரதேசம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 
ஹாட் ஸ்டார் (ஒடிடி)

புனே - பெங்கால்
நேரம் : இரவு 8 மணி

பாட்னா - உ.பி., யோதாஸ்
நேரம் : இரவு 9 மணி